Pages

Friday, March 16, 2012

3 kalangaadhE!

                                                                                                                                                       
                                                                             


       
கலங்காதே
               
1         

பரந்து விரிந்த கடலில் ,
பயணம் செய்வதற்கு ,
பாதையா சமைக்க வேண்டும் ?
சிறு படகு ஒன்று போதும் !
2                  
சுழன்று வரும் சூரியனின் ,
சுட்டெரிக்கும் வெயிலும் ,
சின்னக் குடை மறைத்தால் ,
செயலற்றுப் போகும் !
 3                             
காட்டையும் புரட்ட வரும்
பேய்க்காற்றில் மீள ,
கல்லைச் சுமக்க வேண்டாம் ;
கவிழ்ந்து படுத்தால் போதும் !
 4                                
பனி சூழும் மலையிலும் ,
பாய்ந்தேறும் வலிவுடைய
பணியரை நன்கு நோக்கு ;
பயம்தனைப் போட்டுத்தாக்கு !
 5                             
பாலை வன மெனினும் ,
காலைச் சுடுமெனினும் ,
கலக்கமே அவர்க்கு இல்லை !
இலக்கமே அவர்க்கு எல்லை !
 6                             
ஐயோ ! மலையா ? என்று மலைத்து நிற்காதே !
கையில் உளி எடுத்துச் செதுக்கு !
மலையும் சிலநாளில் சிறு குன்று ஆகும் !
குன்றும் முடிவில் ஒன்றுமில்லாமல் போகும் !
    


           

No comments:

Post a Comment