Pages

Tuesday, October 9, 2012

68 en manaivi ennOdu illai




என்மனைவிஎன்னோடுஇல்லை!


அம்மிமிதித்துஅருந்ததி பார்த்து,
கால் பிடித்த என்முன்,
நாணித் தலை குனிந்து
என் கை பிடித்துக் கொண்டு,
உடலால், உள்ளத்தால்என்றும்,
உங்களைக் கூடியே
இருப்பேன், என்று,
ஊரார் முன் வாக்குக் கொடுத்த,
என் மனைவி,என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்,எனினும்,
உள்ளத்தால்,எனைப் பிரிந்து சென்று விட்டாள்!


அந்திப் பொழுதில் அணையாவிளக்கேற்றி
அறையெல்லாம் மணக்கும் வாசத் தூபமிட்டு
கிணிகிணியென்னும் மணியோசை தவழ
கற்பூரம் காட்டி நெற்றிக்குப் பூதியிட்டு
கண்ணாய் எனைநாளும் கவனித்து இன்றோ
வீட்டை இருளடைய விட்டுவிட்டு வேறோர்
வீட்டுக்குச் சென்றுவிட்டாள்!
விழிபூக்க வைத்துவிட்டாள்!
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்;எனினும்,
உள்ளத்தால்எனைப் பிரிந்து சென்று விட்டாள்!


குளித்து முழுகி வாசலைத் தெளித்துக்
கோலம் போட்டு, அள்ளிச் சொருகிய
கூந்தலுடன்,காபியோடு வந்து,
என்னைத் துயில் எழுப்பியவள்,
நான் எழுந்தேனா இல்லையா?
என்று கூடக் கவலைப் படாமல்,
வேறு ஒருவனுக்குக் காபி கொடுக்கச்
சென்றுவிட்டாள்;
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்;எனினும்,
உள்ளத்தால்,எனைப் பிரிந்து சென்று விட்டாள்!


இது பிடிக்குமா உங்களுக்கு?
எது பிடிக்கும் என்றெல்லாம்,
கேட்டுக் கேட்டு,என் சுவை அறிந்து
எனக்குச் சமைத்துப் போட்டவள்,
நான் சாப்பிட்டேனா இல்லையா?
என்றுகூடக் கவலைப் படாமல்,
வேறு ஒருவனுக்குச் சமைத்துப் போடச்
சென்றுவிட்டாள்;
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்,எனினும்,
உள்ளத்தால்,எனைப் பிரிந்து சென்று விட்டாள்!


வீட்டார் மகிழ, ஊரார் பெருமையடைய,
தோள் கொடுத்து உங்கள் துணையாய் நிற்பேன்
சேர்ந்தே வருவேன்என்று,
என்னைச் சார்ந்தே இருந்தவள்,
இன்று நான் சோர்ந்துவிட்டேன்
என்றுகூடத் தெரிந்து கொள்ளாமல்,
வேறு ஒருவன் வீட்டுக்குச்
சென்றுவிட்டாள்;
என் மனைவி இன்று என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்;
எனினும் உள்ளத்தால்
எனைப் பிரிந்து சென்று விட்டாள்!


சிரித்துப் பேசி
என் சிந்தையை மயக்கியவள்
வருத்தம் தீர்க்கஎன்னை
வாஞ்சையாய் நோக்கியவள்
வாடுகிறேன் நானென்று
ஒன்றும் தெரியாமல்
இருக்கும் ஊர் விட்டு
வேறூர் சென்றுவிட்டாள்
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்,எனினும்,
உள்ளத்தால் எனைப் பிரிந்து சென்று விட்டாள்!


பெண்ணுக்கு மணமாகி
புகுந்த வீடு சென்றாளாம்!
மாப்பிள்ளையோடு
மறுவூர் சென்றாளாம்!
மாசம் மூன்றின் பின் 
மசக்கை எனக்கென்று
உதவிக்கு அழைத்தாளாம்!
அடிசக்கைஎனச் சென்றவள் சென்றவள்தான்!
கட்டியவன் சிந்தனை கடுகளவும் இல்லாமல்
பெண்ணுக்குச் சமைக்கப் போனவள் போனவள்தான்!
உற்றதுணை இல்லாமல், ஊண் உறக்கமின்றி
உள்ளத்து வேதனையில் உடலும் மாய்ந்துவிட்டேன்!
சுற்றமென உடனிருந்து சோர்வை மாற்றியவள்,
வெற்றிடமாய் எனைமாற்றி விட்டதனால், ஓய்ந்துவிட்டேன்!
பெற்று வளர்த்திடவும் பிள்ளைகளால் வேதனைதான்!-வளர்த்து
படிக்க வைத்திடவும் படுகின்றோம் வேதனைதான்!-படித்து
வேலைஒன்று தேடிடவும் வந்திடுமே வேதனைதான்!-கல்யாண
வரனோ வரன் என்று வாடுகிறோம் வேதனையில்!-தேடி
மணத்தை முடித்திடவும் மயங்குகிறோம் வேதனையில்!
எல்லாம் முடித்தோம்;இனி எல்லாம் சுகமென்று
இருந்து ஓய்வெடுத்தால் இன்னும் வேதனையா? 
பிள்ளைகளால் பெற்றவர்க்கு எப்போதும் தொல்லைகளோ?


67 iruLum oLiyum

                                                        



                                                            இருளும்ஒளியும்
                                                         ----------------------------



அங்கேஎன்னசெய்கிறாய்? வா! கீழேஇறங்கிவா!











                                                                                                                           

           என்னைப்பார்!















     வரமாட்டாயா? என்தோகையைப்பார்!

உன்னையார்பார்க்கச்சொன்னது?








       ஒன்று; இரண்டு!; எத்தனைஇறகுகள்! பார்த்தாயா?










      என்ஒளியாகஉன்னைநினைத்தேன்!














       நீநிழலாகத்தான்இருக்கின்றாய்!












           ஒன்றும்சொல்லாமல்சுவரை ப்பார்த்தால்      என்னஅர்த்தம்?








நாம் எத்தனையோ தடவை சண்டை போட்டிருக்கிறோம்!அப்போதெல்லாம்நீஒருதிசைநான்ஒருதிசை என்றுஇருந்திருக்கிறோம்!ஆனாலும்திரும்பவும்
நாம்ஒன்றுசேரவில்லையா?













வா! சிறகுகளைக்கோதி, பேசிமகிழ்வோம்!













         ஆஹா! ஒருவழியாய்நீவந்துவிட்டாய்!
அப்பாடா!நீராடு! உனக்குநான்காவல்!







நீரைவாரிஇறைத்துக்குளித்தால்


என்னசுகம்தெரியுமா?










என்னகுளிர்கிறதா?









           சரிபோதும்வந்துவிடு!உனக்குப்போர்வையாக நான்இருப்பேன்!




   

Tuesday, August 21, 2012

66 mudivum thodakkamum

முடிவும்,தொடக்கமும்.
-------------------------------------

"முடிவில்லாததுஎதுவோஅதுவேமுதலுமானது"

தலைப்பு பொருத்தமற்றதாகத் தோன்றுகிறதோ! தொடக்கம் தானே முதலில் இருக்கவேண்டும்! அதனால் தொடக்கமும் முடிவும் என்றல்லவா இருக்கவேண்டும், என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எங்கே தொடங்கியது என்று தெரியாமல், இங்கேதான் என்று, தொடக்கத்தை, எங்கே தொடங்க முடியும்? கோழிதான் முட்டை இடமுடியும்; அதனால் கோழிதான் முதலில், என்கிறார்கள், ஒரு சாரார்! முட்டையிலிருந்து தானே கோழி வரமுடியும்; ஆகவே முட்டை தான் முதலில், என்கிறார்கள், இன்னொரு சாரார். முதலில் தோன்றியது, முட்டையா? கோழியா? என்ற கேள்விக்கு இன்னும் விடை காண இல்லை!

இறைவன், மனிதனைப் படைத்தான்; மனிதன் இறைவனைப் படைத்தான் என்பார்கள்! மனிதனைப் படைத்தது இறைவன் என்பதால், இறைவனே தொடக்கம் என்பது சரி! அந்த இறைவனையே படைத்தது மனிதன் என்பதால் மனிதனே தொடக்கம் என்பதும் சரி! இரண்டும் சரிதான் என்கின்ற போது, யார் யாரை முதலில் படைத்தது என்ற கேள்வி எழுகிறது! எது தொடக்கம் என்ற கேள்விக்கு இப்போதும் விடை இல்லை!



இவ்வுலகம் படைக்கப் பட்டபோது, பூமியினுள், உயிரினங்களுக்கான விதைகள் இருந்திருக்க வேண்டும்! (அந்த விதைகள் எப்படி வந்தன? அவை தாவரங்களிலிருந்து தானே வந்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்) ஏதோ ஒரு அடிப்படையில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றி இருக்க வேண்டும்! எதற்கும் ஒரு பேஸ் (base) வேண்டும் என்பது அடிப்படை உண்மை!

எந்த அடிப்படையில் பார்த்தாலும், விதைகளின் முடிவில், உயிரினங்கள் தொடங்கின என்று தெரிகிறது! ஒன்றின் முடிவு மற்றொன்றின் தொடக்கம் என்று வைத்துக் கொள்ளலாம்! ஆகவே, முடிவும், தொடக்கமும் என்பது சரியே!

முடிவு இல்லாமல் தொடக்கமில்லை! தொடக்கமில்லாமல், முடிவு இல்லை!
எண்ணிப் பார்த்தால், உண்மை புரியும்!

இருள் முடிந்தால் வெளிச்சம் தொடங்கும்!
இரவு முடிந்தால் பகல் தொடங்கும்!
நிலவு தொடக்கமென்றால், கதிரவன் முடிவு!
நிலம் தொடங்கினால், கடலில் முடியும்!
நாடு தொடங்கினால், காட்டில் முடியும்!

குலை தள்ளிய வாழை வெட்டுப் படும்போது, கன்று விடப்படும்! அது தொடக்கம்!
விளைந்த கரும்பை வெட்டினால், அரும்புகள் துளிர்க்கும்! அது தொடக்கம்!
திரண்ட மேகங்களே, தண்ணீரை வெளியேற்றும்! அதுவும் தொடக்கம் தான்!
மண்ணை அகழ்ந்தால், பள்ளம் தோன்றும்! இதுவும் தொடக்கம் தான்!

விதைப் பருவம் முடிகிறது! செடிப் பருவம் தொடங்குகிறது!
செடிப் பருவம் முடிகிறது! மரம் தொடங்குகிறது!
பூ தொடங்கி, பிஞ்சில் முடிந்து;
காய் தொடங்கிக், கனியில் முடிந்து;
விதை தொடங்கிச் செடியில் முடிந்து, இவ்வாறு ஒன்றின் முடிவு, மற்றொன்றின் தொடக்கமாகிறது!

பிள்ளைப் பருவம் முடிந்து, பள்ளிப் பருவம் தொடங்குகிறது!
பள்ளிப் பருவம் முடிந்து, பயிற்சிப் பருவம் தொடங்குகிறது!
பயிற்சிப் பருவம் முடிந்து, பணிப் பருவம் தொடங்குகிறது!
பணிப் பருவம் முடிந்து, ஓய்வுப் பருவம் தொடங்குகிறது!

பழைய கற்காலம் முடிந்து, புதிய கற்காலம் தொடக்கம்!
புதிய கற்காலம் முடிந்து, உலோக காலம் தொடக்கம்!
இதிகாச காலம்! சரித்திர காலம்! மன்னர் காலம்! ஆங்கிலேயர் காலம்! நமது காலம்! இப்படி ஒவ்வொரு கால முடிவும் மற்றொரு காலத்தின் தொடக்கமாக இருந்திருக்கிறது!

சாலையில் பயணிக்கிறோம்! ஊர் எல்லைகள் காட்டும் கற்களைக் காண்கிறோம்!
ஓர் ஊர் முடிகிறது! மற்றோர் ஊர் தொடங்குகிறது!
ஒரு மாவட்ட எல்லை முடிகிறது! அடுத்த மாவட்ட எல்லை தொடங்குகிறது!
ஒரு மாநிலம் முடிந்தால், வேறு மாநிலம் தொடங்குகிறது!
ஒரு நாடு முடிந்தால், மற்றொரு நாடு!

மழலைப் பருவம் முடிந்து, பிள்ளைப் பருவம் தொடங்கி;
பிள்ளைப் பருவம் முடிந்து, வாலிபப் பருவம் தொடங்கி;

வாலிபப் பருவம் முடிந்து மணப் பருவம் தொடங்கி;
மணப் பருவம் முடிந்து, பேராண் பருவம் தொடங்கி;
பேராண் பருவம் முடிந்து, கிழப் பருவம் தொடங்கி;
கிழப் பருவம் முடிந்து, ....
இறப்புக்குப் பிறகும் பிறப்பு இருப்பதாக நமது மதநூல்கள் கூறுகின்றன!
என்று பிறந்தோமோ! அன்றே இறப்புக்கான அனுமதியும், கிடைத்து விடுகிறது!
அதாவது தொடக்கமே, முடிவின் தொடக்கம்!
எனவே, பிறப்பு, இறப்பின் தொடக்கம்! இறப்பு பிறப்பின் தொடக்கம்!

உதிர்கின்ற பழுத்த இலையைப் பார்த்து உதிராத பச்சை இலை, சிரிக்குமாம்;
உதிர்கின்ற இலை சொல்லுமாம்,
"இன்று நான்; நாளை நீ", என்று.
உதிர்கின்ற பழுத்த இலையைப் பார்த்து உதிராத பக்குவப்பட்ட பச்சை இலை, சொல்லுமாம்;
"இன்று நீ! நாளை நான்" என்று.
நேற்று தொடக்கம்; இன்று முடிவு; நாளை இன்றாகும்; இன்று நேற்றாகும்!

Misfortune never comes singly- துன்பம் தனித்து வருவதில்லை! இன்பமும் அதுபோலத்தான்! இன்பத்துக்குப் பிறகு துன்பம் இருக்கிறது! துன்பத்துக்குப் பிறகு இன்பம் இருக்கிறது! ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கும் என்பதும் இதைத்தான்! ஆகவே எல்லாம் முடிந்தது, என்று சோம்பி விடக் கூடாது! அடுத்த ஒன்று தொடங்கப் போகிறது என்று முயல வேண்டும்! முயற்சி இல்லாருக்குத் தொடங்கும் அடுத்த ஒன்றும் துன்பமே!

"கொடுமையாக இருக்கிறதே, என்று அடுத்த ஊருக்குப் போனானாம்; அங்கேயும் ஒரு கொடுமை இவனை வாவென்றதாம்"; முடிவே தொடக்கம் என்பதற்கு இதை விட, நல்ல உவமை கிடைக்காது!

நிலையாமையைச் சொல்லவே இவ்வளவு சொற்களும்! எதுவும் நிலைக்காத இவ்வுலக வாழ்வில், நிலையாமை ஒன்றே நிலையானது! இருக்கின்ற வரையில் நல்லது செய்தால், கிடைக்கும் நற்பெயர் நம்மை நிலைக்கச் செய்யும்!
பாலைவனமும் சோலைவனமாகும்!

நல்லதுஎன்றால்,அதுதொடக்கமாகஇருந்தால்என்ன?முடிவாகஇருந்தால்என்ன?தொடக்கம்முடிவாகட்டும்! முடிவுதொடக்கமாகட்டும்! அனைத்தும்நலமாகட்டும்!


Wednesday, July 4, 2012

65 God is dove

God is Dove!

Dove is the symbol of universal peace!
Peace is the fruit of  mankind Love!
Love is only the nature of God!
So, God may be denoted as dove!


Yesterday, with us you were!

Today you with us no more!
Life is not,we know, ever lasting;
but love, not so 't is ever lasting!


There was peace, once, in this universe;


Then there were you, living, among us;
That was you, the love!
Now it is in reverse.

There was then, the pleasing amicability;

For you were here to take pity;
That was you, the love!
Now'e see full of atrocity.


Then there was growth in this vast world;


For people were able to work hard;
And they believed in love!
And now it is in yard.



We fear, that perhaps the love might be the past!


To remember that once it was here, at last!
Until that we believe in God,
That shouldn't be so bad! 

Sunday, June 24, 2012

64 A crow poses to photo


ஒருகாக்கை,போட்டோவுக்குப்போஸ் தருகிறது!

போஸ்டுகம்பியில்அமர்ந்திருந்தஎன்னிடம்,
"கா,கா" என்றான், ஒருமனிதன்; கவண்
வில்லைப் போல,கருப்பாகக் கையில்
இருந்ததைப்பார்த்துப்பயந்து, பறக்க
எத்தனித்தபோது, "பயப்படாதே!
உன்னைத்தான்" என்றான்!







"கியா?" என்றேன்!




"இதுகேமிரா!
"போஸ்கொடு! 
போட்டோஎடுக்கிறேன்" என்றான்!







"ஆ!கா! போட்டோவா?" என்றுவாயைத்திறந்த என்னை, இப்படிப்புரட்டிப்புரட்டிஎடுக்கிறான்!






"நன்றாகக்குனிந்துகொஞ்சம்கொஞ்சமாக, நிமிரவேண்டும்,என்றான்!








இன்னும்கொஞ்சம்";" 










"சர்க்கஸில்புலியைக்கூடஇந்தப்பாடு படுத்தமாட்டார்கள்!"







"ஓ! கே! இன்னும் கொஞ்சம்மட்டும்" என்றான்!







"யப்பாவ்! போதுமா?"
" good! போதும்; போதும்!
 நிமிர்ந்துகொள்" என்றான்!









" இனிகஷ்டமில்லை! மேலேபார்!" என்றான்!





கீழேபார்!" என்றான்!
இரைதேடக்கூட
இப்படிப்பார்த்ததில்லை!





                                                   " நிமிர்ந்து,

"நேராய்நில்", என்றான்!










"சாய்ந்துநில்", என்றான்!










"அப்படித்திரும்பு!", என்றான்!









"வாயைத்திற", என்றான்!










"இன்னும்நன்றாக", என்றான்!


"கம்பத்திலிருந்து, பறப்பதைப்போல", என்றான்! "அப்படியெல்லாம்கொடுக்கமுடியாது! சிறகை விரித்தவுடன், வேகமாய்ப்பறந்துவிடவேண்டும்! இல்லையென்றால், காற்றின்வேகத்தில், பேலன்ஸ்இல்லாமல், தவறிக்கீழேவிழுந்துவிடுவோம்! நான் பறக்கும்போது, முடிந்தால்எடுத்துக்கொள்", என்றுசொன்னேன்! "இவ்வளவுதெரிந்துவைத்திருக்கிறாயே! என்கையிலிருப்பது, கேமிராஎன்றுதெரியவில்லையா?" என்றான்! "தெரியும்! இப்போதெல்லாம், அதற்குள்துப்பாக்கியைஒளித்துவைத்திருக்கிறார்கள், என்றும்தெரியும்", என்றுசொல்லிவிட்டு,இவனிடம்மாட்டி, போட்டோ, எடுப்பதைவிட, "ஆளைவிட்டால்போதும்சாமி" என்று, விருட்டென்று பறந்தேன்! எடுத்தானாஇல்லையாஎன்றுதெரியவில்லை!



Friday, June 22, 2012

63 en aasai nhiRaivERumaa?

என்ஆசைநிறைவேறுமா?






"
நான்இறந்தபிறகுஎன்உடல்எரியூட்டப்பட்டு,
அந்தசாம்பல்,நம்அன்னைநாடாம்இந்தியாவின், ஆறுகளிலும்,வயல்களிலும்தூவப்படவேண்டும்,
என்று விரும்புகிறேன்!"--பண்டிதஜவஹர்லால்நேரு.
மறைந்தநம்முன்னாள்பாரதப்பிரதமர்,ஆசியஜோதியின்இந்தஆசை, 
அவருடைய அளவிடஇயலாதநாட்டுப்பற்றைக்காட்டும்அதே
சமயம்,   இயற்கையை எந்த அளவுக்கு அவர்நேசித்தார் என்ப தையும் தெளிவாகக்காட்டுகிறது!மதம், மறுஜென்மம் ஆகிய வற்றில், நம்பிக்கைஇல்லாதவர் என்றுஅவரைப்பற்றிச்சொல்வார்கள்!ஆனாலும் அவருடையசாம்பலைஆறுகளிலும்வயல்களிலும்
தூவவேண்டும், என்றுஆசைப்பட்டிருக்கிறார்!

நான்இயற்கையைநேசிக்கிறேன்! இயற்கைஎனக்குள்அடக்கம்! நான்  இயற்கையினுள்அடக்கம்! இயற்கையிலிருந்துபிரிந்தேன்! மறுபடியும் 
இயற்கையிலேயேகலப்பேன்! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் தொகுப்பே இயற்கை! அதுபோலவே, நானும் பஞ்சபூதங்க ளாலேயே ஆக்கப்பட்டிருக்கிறேன்! இந்தஉடல், நிலம்! அதில்ஓடும்குருதி, நீர்! உடலின்வெப்பம், நெருப்பு! என்சுவாசம், காற்று! உள்ளே இருக்கும் வெற்றிடம், ஆகாயம்!இதையேநமதுமூதாதையரும் பித்தம்(நிலம்) வாதம்(காற்று, ஆகாயம்) சிலேட்டுமம்(நீர்,நெருப்பு) என்னும் மூன்று நாடிகள்நம்உடம்பைஆட்டிவைக்கின்றனஎன்றார்கள்! இயற்கையும்அதுவே! எதிலி ருந்துவந்தேனோ, அதைநான்விரும்புவதில், என்னவியப்பு?
அதனால் தானோ, என்னவோ, நமதுமுன்னோர்இயற்கையேஇறைவன் என்றனர்! அந்தஇயற்கையில்கலப்பதும், இறைவனில்கலப்பதும்ஒன்றுதான்!




விண்ணைமுட்டும்இமயமலையின், எண்ணற்றசிகரங்களில்ஏதேனும்ஒன்றாக இருக்கநான்ஆசைப்படுகிறேன்!







   கண்ணைமுட்டும்அம்மலை
எங்கும்பரவிக்கிடக்கும்
சில்லென்றபனிச்
சிதறலாகஇருக்கநான்ஆசைப்படுகிறேன்!




அங்கேவான்நோக்கி,உயர்ந்து
வளர்ந்த, மரங்களில்ஒன்றாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!





அம்மரங்களின்உச்சிஒன்றில், எட்டாதஉயரத்தில்அமர்ந்திருக்கும், பறவைகளுள்ஒன்றாக இருக்கநான்ஆசைப்படுகிறேன்!





பாய்ந்துவரும்கங்கையின்
நடுவே, மூழ்காமல்தலை
காட்டும், பாறைகளுள் ஒன்றாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!

அப்பாறைகளில்வளர்ந்து,
வண்ணமலர்களைத் தாங்கி இருக்கும்,
 பசுமைமாறாச் செடி களில்
ஒன்றாகஇருக்கநான்ஆசைப்படுகிறேன்!

காட்டின்நடுவே, கருமேகம்சூழ்ந்தஒருகுன்றின்மேல், மழையில்குளித்தபடி, பனியில்
நனைந்தபடி, திரியும்ஒரு
விலங்காகஇருக்க நான்ஆசைப்படுகிறேன்!




பரந்தகடலின்நடுவே,ஏகாந்தமாய் மிதக்கும்தீவுகளில்ஒன்றாகஇருக்கநான் ஆசைப்படுகிறேன்!




அக்கடலின்ஆழத்தில்,அலுப்பின்றி
நீந்தும் மீன்களுள்ஒன்றாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!






விண்ணில்மிதந்து, சுதந்திரமாகஓடும், 
வெண்மேகங்களுள் ஒன்றாகஇருக்க
நான்ஆசைப்படுகிறேன்!



அவ்விண்ணிலிருந்து, இவ்வுலகை
ரசித்தபடி, உயரத்தில்கண்
சிமிட்டும், தாரகைகளுள்
ஒன்றாக இருக்கநான்ஆசைப்படுகிறேன்!


மலைச்சாரலின் ஓரத்தில்
அமைதியாகத் தவழும்,
நதியோடு பேசும், மெல்லிய
பூங்காற்றாக அலைய, நான்
ஆசைப்படுகிறேன்!





மழைபெய்யும்போதுவீசும்
மண்ணின்வாசமாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!




மலர்ந்துபரப்பும்மலர்களின்மணமாக
இருக்கநான் ஆசைப்படுகிறேன்!




கண்ணையும்கருத்தையும்கவரும்அதன் வண்ணங்களுள்ஒன்றாகஇருக்கநான் ஆசைப்படுகிறேன்!





குடிசையில்என்றாலும், ஒளிவீசி
மகிழும்தீபங்களுள் ஒன்றாகஇருக்கநான்
ஆசைப்படுகிறேன்!







அந்தத்தீபஒளியில்தூங்கிக்கொண்டிருக்கும், மழலையின்மொழியாகஇருக்கநான்ஆசைப் படுகிறேன்!







அனைத்துக்கோள்களையும்தாங்கிப்பிடிக்கும்
ஆகாயத்தின்ஒரு பகுதியாகஇருக்க
நான்ஆசைப்படுகிறேன்!






நிலத்தின்பொறுமையாக, நீரின்
தண்மையாக, நெருப்பின்
வெம்மையாக, காற்றின்உயிர்மையாக,
ககனத்தின் பெருமையாகஇருக்கநான்
ஆசைப்படுகிறேன்!



இரவுநேரத்தில், தனிமையாகஇருக்கும்
போது, மௌனமாகநிலவுமே
ஒருநிசப்தம்! அந்தநிசப்தமாக இருக்க
நான்ஆசைப்படுகிறேன்!




     நாம்  பிறந்தது முதலே மருந்து மாத்திரைகளாலேயே  இந்த உடம்பு பேணப்பட்டு ,வந்திருக்கின்றது !  அதற்கு, நன்றிக்கடனாக , மருத்துவத்துறைக்கு ஏதேனும் செய்ய ஆசைப்படுகிறோம் ! ஆகையால், நானும் ,என் மனைவியும் ,இறந்த பிறகு எங்கள்  உடலை, மருத்துவ ஆய்வுக்கு தானமாக அளிக்க ஆசைப்படுகிறோம் ! இதையே எங்கள் ஒப்புதலாகவும் உறுதி அளிக்கிறோம் !


ஆசை நியாயமாக இருந்தால், அது நடக்கும் என்பார்கள்! என் ஆசை நடந்தால், அது  நியாயமாக இருக்கும்!





என் ஆசை நிறைவேறுமா?