Pages

Tuesday, March 27, 2012

34 Magic Nine


                                       Magic Nine
                                                     
                                                   
1) The products of nines are equal to 9,When the digits are added;
Ex:--18,27,36,45,81
1+8=9,2+7=9,3+6=9,4+5=9,8+1=9
2)  If the sum of the digits of a number is 9,,Then it is divisible by 9;
Ex:--2673; 2+6+7+3=18and 1+8=9
2673 -:-9=297
3)  When the sum of the digits of any number is subtracted from the number itself,
then the remainder is divisible by 9;
Ex:-- 37469 ; 3+7+4+6+9=29;
37469---29=  37440-:-9=4160
4)  If 9 is added to any number,the sum of the digits of the number is equal to the
sum of the digits of the original number.
Ex:-26;  26+9=35;      2+6=8 and  3+5=8
5)  When 1 is added to any number,the result is more;but 1 is added to the multiples
of 9,the result is 1.
Ex:--   1+2=3,1+3=4,1+4=5,1+5=6,1+6=7.
Ex;-     9+1=10 ;(1+0=1) 18+1=19 ;1+9=10;1+0=1;63+1=64; 6+4=10;1+0=1
Thus,We can see all the numbers.
6)  There are 9 holes in our body.
They are :--------2 eyes+2 ears+2 nostrils+1 mouth+1 sex organ+1 anus.
There are 9 planets;
They are:--------sun,moon,mars,mercury,jupiter,venus,saturn,uranus and neptune.
There are 9 diamonds;
They are:----ruby,coral,diamond,emerald,laps lazuli,pearl,sapphire,sardonyx and topaz. 
There are 9 food grains:
They are :---paddy,ragi,millet,maize,black gram,red gram,wheat and horse gram.
There are 9 emotions; and 9 nights





                                                            

33 UzhaippOm vaarungaL

உழைப்போம்!வாருங்கள்!!



வஞ்சம் யாவும்வழி எஞ்சிப் போகவென,
வாழ்வில் உழைக்கலாம்;வாருங்கள்!
வளமை சேரவெனக் கடமை ஆற்றவென,
வருகவே!எவரும் கேளுங்கள்!
அஞ்சிச் சாவதினை அடிமை வாழ்வுதனை,
அருமை அன்றுஎனத் தேருங்கள்!
அந்த கன்வருவ தெந்தநேர மென,
அறிந்த வர்ஒருவர் கூறுங்கள்!
நெஞ்சி னூடுருவு நேர்மை கூறுவன,
நெறிக ளாகுமென அறியுங்கள்!
நெறி மறந்துவிடின் நீதிகூற்ற மென,
நொடியில் சாய்க்குமென அறையுங்கள்!
மிஞ்சு வார்முடிவிற் கெஞ்சுவார்கள் வினை,
முடித்தி டார்களெனத் தெளியுங்கள்!
மிடியி லாடுலகு கடுகி மீளுமென,
மறந்தி டாதபடி உழையுங்கள்!





             

32 neeyE thaan kaaraNam!

நீயேதான்காரணம்!
                      
காட்டுக்குள்ளே உன்னைத்தேடிக் கண்டுபிடிச்சதாரு?-ஒரு
கோட்டைக்குள்ளே ஒனக்கு வீடு பிடிச்சிக் குடுத்ததாரு ?
கண்ணு மூக்குகையி காலு பாத்து வச்சதாரு?-ஒன்
கருத்த நீயும் திருத்திக்கோன்னுமூளைவச்சதாரு?
கண்கலங்கி அழுதிடாம கஞ்சிகுடுத்ததாரு?--ஒரு
கணக்கு பாத்து ஒன்ன இங்கே வெளிய விட்டதாரு?


    
மண்ணுக்குள்ளே மதிமயங்கி நிக்கச் சொன்னதாரு?-ஒன்
மனசுபோன பாதையெல்லாம் போகச்சொன்னதாரு?
எண்ணம்போல வாழ்க்கையின்னு எழுதி வச்சார் பாரு!--அந்த 
எண்ணம் தானே துயரமுன்னு யோசிச்சியா பாரு!
கஷ்டமுடா சாமியின்னு கலங்கி நிக்கிறதாரு?--நீ
கண்டபடி அலைஞ்சதுதான் காரணமா?பாரு!


     எல்லாத்தையும் ஒனக்குத் தந்து அனுப்பி வச்சான் பாரு!--அவன்
இஷ்டப்படி எதுவுமிங்கே நடப்பதில்ல பாரு!
இப்பிடித்தான் நடக்கவென்னுவிதிய வச்சான் பாரு!--அத
என்னிக்காவ தொரேநாளுமதிச்சதுண்டா ?பாரு !
அப்படியே தப்புநம்ம மேலிருக்க பாரு!--அதுக்கு
அவந்தலைய உருட்டலாமா?யோசிச்சித்தான் பாரு!

      
நாளைக்கின்னு சொத்தமட்டும் சேத்துவச்சேபாரு!--அந்த
நாளைக்கின்னு என்னசேத்து வச்சிருக்கே?பாரு!
சொந்தமாக வர்றதென்ன கேட்டிருக்கார் பாரு!--ஒன்
சொந்தபந்தம் கூடக்கூட வராதுன்னார் பாரு!
எந்தநாளும் மனுஷனாக இருக்கிறதப் பாரு!--அது
அந்தநாளில் ஒனக்கு ஒதவும் அறிஞ்சுக்கத்தான் பாரு!
                                                                               
                                                                               
                            

Monday, March 26, 2012

31 maNamakkaLE neevir vaazhka!

மணமக்களே! நீவிர்,வாழ்க!!



இருவர் என இருந்த நிலை மாறி,நீவிர்,
ஒருவரெனச் சிறந்திடவே மணம் காண்கின்றீர்!
அருமைஎனப் பலர்புகழ ஆற்றின் வாழ்க்கை,
அதுதானே வள்ளுவனும் கண்ட வாழ்க்கை!
அருமாண்பைப் பெற்றோராய் அகிலம் காண,
அன்புமணம் பரப்புவதில் அகிலும் நாண,
அவனியிடை வாழ்ந்திடுவீர் ஆன்றோர் போற்ற,
ஆற்றிடுவீர், அருந்தொண்டாம் இல்வாழ்வன்பால்!

தனியொருகை கொட்டலிலே ஓசை இல்லை!
தனியொருகால் தானாக ஓடல் இல்லை!
தனி மரமோ தோப்பென்று ஆதல் இல்லை!
தனிநிலவால் பூமிஇருள் போதல் இல்லை!
தனியொன்றாய் இதுவரையில் நின்றீர் நீவிர்!
தனிமையிலே இனிமைதனைக் கண்டீர் அல்லீர்!
இனியொன்றாய் இணைந்திடுவீர் ஏற்றம் உறுவீர்!
இன்பினிலும் துன்பினிலும் இனிமை பெறுவீர்!

காதலினை உயர்வென்றார் தமிழர் நாளும்;
கடிமணமே முடித்தவரும் களித்தார் நாளும்;
ஈதலிசை பட வாழ்தல் இனிதென் றாரே!
இருமனத்து உறவினையே மணம் என்றாரே!
கொண்டவனைப் பேணுதகைப் பெண்ணுக்காகும்!
கொண்டவளைப் போற்றுவதோ ஆணுக் காகும்!
இன்பெனினும் துன்பெனினும் இணைந்து செல்லல்,
இல்வாழ்வோர் ஏற்குதகைக் கடமை யாகும்!

இல்வாழ்வு பூஞ்சோலை அல்ல வென்பார்!
எவ்வாழ்வு நல்வாழ்வு என்னார்; பின்னர்,
இல்வாழ்வு அல்வாழ்வு என்ன வாழ்வு?
இணையில்லா வாழ்வின்பம் இல்லை என்பார்!
எவ்வாழ்வில் கல்லில்லை;முள்ளும் இல்லை?
இவையெல்லாம் இல்லாமல் உலகம் இல்லை;
இவ்வாழ்வில் இவையெல்லாம் கடந்து மீண்டு,
இனிமைபெறல் இறைவனுடை எண்ணம் ஆகும்!

ஆலைஎனில் வேலையிலா ஆலை யுண்டோ?
ஆழிஎனில் அலையில்லா ஆழி யுண்டோ?
மாலையிலே காலாற நடந்து செல்லல்,
பாதையிலே கல்கண்டு பயந்தால் ஆமோ?
தேனுண்ணக் கூட்டுள்ளே கையை விட்டோன்,
தேனீக்கள் கொட்டற்கு அஞ்சல் ஆமோ?
தேனென்றே வாழ்வென்றும் இனிதா கட்டும்!
தொடங்கிடுவீர்!புதுவாழ்வு!வாழ்த்து கின்றேன்!

               
                                                                                      

30 VaazhththukinREn!

வாழ்த்துகின்றேன்!!



வயற்காட்டில் விளைபொருளை வாரிப் போந்து,
வாழ்கின்ற வீட்டினிலே கொண்டு சேர்த்து,
வருபசியும்,உறுபிணியும் போகற் கென்று,
வளர்கன்னல் மஞ்சளுடன் வண்ணம் தீட்டி,
வயனன்னெல் தேர்ந்தபுதுப் பானை இட்டு,
வண்ணவுடை யணிநகையில் குலவை கொட்டி,
வளைமாதர் கைசிவக்க வண்ணம் ஆக்கி,
வாழையிலை பெய்ததனை வணங்கி யுண்டு,
வாழ்கென்றும் மகிழ்வென்றும் பொங்கவென்றும்,
வளங்கள்பல பொங்கட்டும் வாழ்வில் என்றும்,
வாழ்வில்நலம் பெற்றுலகில் ஒங்க வென்றும்,
வருபொங்கல் நன்நாளில் வாழ்த்து கின்றேன்!


பழம் பொருளை எரித்திடுதல் போகியாகும்!
பாதகங்கள் தவிர்த்திடுவோம் வாழ்வில் நாமும்!
பானையிலே நெய்மணக்கப் பொங்கும் பொங்கல்!
பரிந்துணர்வைக் காப்பதற்கு மக்கள் பொங்கல்!
உழைப்புக்கு ஏற்றம்தர மாட்டுப் பொங்கல்!
உறவோர்க்கு மகிழ்ச்சிதரக் காணும்பொங்கல்!
உற்றோரும் மற்றோரும் கூடி நின்று,
ஒற்றுமையாய் இருத்தற்குஉறுதி பூண்டு,
உயிரினங்கள் ஒன்றென்று மதித்து வாழ்ந்து,
வேற்றுமைகள் நீங்கவென வேள்வி செய்வோம்!
வெல்லுவது மனிதமென முழக்கம் செய்வோம்!
உலகனைத்தும் உயர்கவென வாழ்த்து கின்றேன்!


உயிர்க்கெல்லாம் உணவளிக்கும் உழவர் வாழ்வு,
உவகையிலே பொங்கவென வாழ்த்து கின்றேன்!
உடனிருந்து உழைத்துவரும் கால்ந டைகள்,
உள்ளத்தில் மகிழ்ச்சி பெற வாழ்த்து கின்றேன்!
உலகத்தை உயர்த்தற்கு ஓய்தல் செய்யா,
உழைப்பாளர் வாழ்கவென வாழ்த்து கின்றேன்!
அடுபகையை ஓட்டற்கு அழிந்தி டாத,
படைவீரர் வாழ்கவென வாழ்த்து கின்றேன்!
பண்புடைமை கொண்டுபணி செய்தற் கென்றே,
பரிந்துவரும் பான்மையரை வாழ்த்து கின்றேன்!
பாங்குடையோர் அனைவரையும் ஊக்கு விக்கும்,
பாருள்ளோர் அனைவரையும் வாழ்த்து கின்றேன்!
    
      
                       

29 oru aathma pEsukiRadhu !


ஒருஆத்மாபேசுகிறது!


                                                                     

  ஏ!மனிதா!நான்,உன்,உயிர்,ஆத்மா பேசுகிறேன்!நான்,நீயாக இருந்தால் ,எல்லோரும் என்னை,நீங்கள், என்று அழைப்பார்கள்!உன்னை விட்டு நான் பிரிந்தால்,உன்னை,ஜடம் என்பார்கள்!நீயாக, நீ இருக்கின்ற போது,நீ யார்?ஜடமா?இல்லை,ஆத்மாவா?ஜடம்,என்றால் உன்னால் பேச முடியாது!ஆத்மா என்றால் உன்னைப் பார்க்க முடியாது!உன்னை நீயாக்குவது எது?ஜடமா?இல்லை நானா?உன்னுள் நான் உடலாக இருக்கின்றேன்!ஜடம் என் சட்டையாக இருக்கின்றது!நீ தினம் ஒரு சட்டையை மாற்றுகிறாய்!என்னால் அப்படி முடியாது!எனக்கு வழங்கப் பட்டது ஒன்றே ஒன்றுதான்!என்ன மாயமோ?இல்லை,மந்திரமோ?இது,நான் வளரும்போது ,தானும் வளர்கின்றது!உன் சட்டையோ நீ வளரும்போது சிறிதாகின்றது!ஆனால் உன் சட்டை கிழிந்தால்,அதை-நீ-தூக்கி எறிவாய்!என் சட்டை கிழிந்தால் அது என்னைத் தூக்கி எறியும்!நான்,உன்உயிர் (ஆத்மா)பேசுகிறேன் ! என் சட்டை இப்போது கிழிந்த நிலையில் இருக்கிறது!எனக்குத் தெரியும்,விரைவில் அது என்னைத் தூக்கி எறியும் என்று!அந்த நாளை ஆவலாக ,நான் எதிர்பார்க்கிறேன்!ஏன் தெரியுமா?சட்டை கிழிந்தவனை யாரும் மதிக்கமாட்டார்கள்!என்னையும் அப்படித்தான்;யாரும் மதிக்கவில்லை!அதனாலேதான்,என் சட்டையைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்!விரைவில் என்னைத் தூக்கி எறி என்று! பிறகு எனக்கும் ஒரு புதுச்சட்டை கிடைக்கும்!சிறிதாகத்தான் இருக்கும்!இருந்தாலும்,அதைப்போட்ட பிறகு என்னை எல்லோரும் கொஞ்சி மகிழ்வார்கள்!நான் அவர்களை மிதிப்பேன்!அவர்கள் கோபப்படாமல் என்னை,மதிப்பார்கள்! ஏ!மனிதா!நான் உன் உயிர் (ஆத்மா)பேசுகிறேன்!நானும் ஜடமும் கலந்ததுதான் நீ,என்றாலும் இன்று நீ,மனிதன்!நான், ஆத்மா!இல்லை!இல்லை!ஆவி!இன்னும் கேள்!

                                                   
                                                                       
                                                             
ஏ!மனிதா!உன் ஆத்மா,பேசுகிறேன்!பொய்யாகப் போகும் உன் உடலை மெய்யென்றாய்!மெய்யாய் இருக்கின்ற நான்,பொய்யா?நான் உலவ,எனக்கு ஒரு ஜடம் தேவை!ஜடத்துக்குள் நிறையும்போது நான்,நீயாகி விடுவேன்!அப்போதுதான்,நீ மனிதன்!உன்னிலிருந்து நான் பிரிந்தாலும்,என்னால் உன்னைப் பார்க்க முடியும்!உன்னால் என்னைப் பார்க்க முடியுமா?முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சு,முட்டையைப் பார்க்க முடியும்;முட்டையினால் குஞ்சைப் பார்க்க முடியாது!கூட்டிலிருந்து வெளிவந்த பறவை,கூட்டைப்பார்க்க முடியும்!கூட்டினால் பறவையைப் பார்க்க முடியாது!நான் குஞ்சு!நீ உடைந்த முட்டை!நான் பறவை!நீ கலைந்த கூடு!நான் காற்று!நீ கிழிந்த பை!உன் உடம்புக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இதுதான்!----மாயமாகப் போகும் நான்ஆவியாகி விடுவேன்!ஜடமாகிப் போகும் உன் உடலை ,"போய் விட்டானா?பாவி!"என்று பலரும் ஏச வேண்டுமா?--வேண்டாமா?-------என்றால்,என் கதையைக் கேள்!பரம்பொருளிலிருந்து,பிரிந்து வந்தவன்,நான்!அது பரமாத்மா!அதன் ஒரு பகுதி நான் என்பதாலும் ,இயங்கியும்,--இயங்காதது எனப்படுகிற ஒன்றிலிருந்து,வந்து இயங்குபவன் நான் என்பதாலும் ,என்னை ஜீவாத்மா,என்றார்கள்!ஜீவனுள்ள ஆத்மா!ஆனால் பரமாத்மா நிலையானது!ஜீவாத்மா நிலையற்றது!பரம்பொருளின் ஒரு பகுதி தான் நான் என்பதால் நானும் பரம்பொருள் தான்!அதாவது,நான் கடவுள்!உனக்குள் நான் இருக்கிறேன் என்பதால்,உனக்குள் கடவுள் இருக்கிறார்,என்றார்கள்!எண்ணிப்பார்!வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வந்தால்,வீட்டை அடைவதுதான் நமது குறிக்கோளாக இருக்கும்!அதைப்போல பரம்பொருளிலிருந்து பிரிந்து வந்த நான் மீண்டும் பரம்பொருளை அடைய விரும்புகிறேன்!அதற்கு நீ உதவ வேண்டும் என்றால் கடவுளுக்குரிய குணங்களுள், கொஞ்சமேனும் உனக்கு இருக்க வேண்டாமா?நான் ஏன் உதவ வேண்டும்?என்கிறாயா?என்னைச் சுமந்து திரிகின்ற உனக்கு,அந்த பாரம் குறைய வேண்டுமானால்,நீ உதவத்தான் வேண்டும்!எங்கிருந்து வந்தோமோ,அங்கே மீண்டும் செல்லவேண்டுமானால் வந்தவழி தெரிய வேண்டும்!அன்பு வழியில் வந்தோம்;அஹிம்சை வழியில் வந்தோம்;அந்த வழியில் தானே திரும்ப வேண்டும்?அந்த வழி மறந்து,எதிர்த்திசையில் சென்றால், நமது இடத்தை அடைய முடியுமா?பரம்பொருளில் தான் இணைய முடியுமா?ஏ மனிதா!எண்ணிப்பார்!என்றெல்லாம் எண்ணி,உனக்கும் கூறிக் கொண்டிருக்கின்றேன்!என்றாலும் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன!அவை என்னவென்று கூறுகிறேன்,கேள்!



                                                                            ஏ!மனிதா!கோபம் கூடாது என்று மனம் சொல்கிறது!துக்கப் படாதே என்று மனம் சொல்கிறது!அதையும் மீறி கோபம் வருகிறது!துக்கம் வருகிறது!என்றால் கோபப் பட வைப்பது யார்?துக்கப்பட வைப்பது யார்?மனம் ஒன்று!ஆனால் கோபப்பட வைப்பதுவும்,துக்கப்பட வைப்பதுவும் மற்றொன்றா?இது எப்படி?உன்னில் நான் இருக்கிறேன்;இவர்கள் எங்கிருக்கிறார்கள்?இவர்களை இயக்குவது யார்?ஆத்மாவாகிய எனக்கும் மனத்துக்கும் ,அந்த மற்றொன்றுக்கும்உள்ள தொடர்பு என்ன?இவர்கள் எல்லாம் வேறு வேறு என்றால் ,நான் யார்?இவற்றில் உன் பங்கு என்ன?பஞ்சபூதங்களும் உன்னுள் அடக்கம் என்கிறார்கள்!உன்னுள் இணைந்த குற்றத்துக்காக ,அவையும் உ ன் பாவத்தில் பங்கு பெற வேண்டுமா?உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபம் தான் வருகிறது!செய்வது யாரோ ஒருவர்!பலன் உனக்கா?இறைவன் உன்னைப் படைத்த நோக்கம்தான் என்ன?மனிதா!இவற்றுக்கான விடைகளையே இன்னும் நீயும் கண்டுபிடிக்கவில்லை!நானும் கண்டுபிடிக்கவில்லை!ஆனால் பரம்பொருளின் ஒரு பகுதி என்று மட்டும் என்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்!எதுவுமே தெரியாத எனக்கு,அந்தப் பெயர் எதற்கு?எல்லோரும் பரம்பொருளின் ஒரு பகுதி தான் என்கிறார்கள்!பிறகு ஏன் ஒருசிலர் நல்லது செய்ய,பலர் பாவம் செய்கிறார்கள்?யார் எதைச் செய்தாலும் அதுபற்றி நீ கவலைப் படாதே என்கிறார்கள்!அவர்கள் செய்கையினால் பாதிக்கப் படுவது நானாக இருக்கும்போது ,எப்படி நான் கவலைப்படாமல் இருக்க முடியும்?அடுத்த பிறவியில் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் ,என்கிறார்கள்!தவறுக்குத் தண்டனை என்றால்தானே தப்பு செய்த அவர்கள் திருந்துவார்கள்?எனக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும்!நாம் நல்லவனாய் இருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது என்ற ஓர் தெளிவு பிறக்கும்?ஒரு பலனும் இல்லையென்றால் ,திருந்துவது எப்படி?எப்போது?அடுத்த பிறவியில் இதை யார் பார்த்தார்கள்?மனச்சாட்சி அவர்களைப் பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள்!கண்ணால் காணும் சாட்சிகளையே மாற்றி விடுகின்ற இவர்கள் ,மனச்சாட்சியை ,ஏமாற்றவா?கஷ்டப்படப் போகிறார்கள்!விஞ்ஞானத்திற்கு உட்பட்டதுதான் கடவுள் என்று ஒப்புக் கொண்டோம்!காரணம் இல்லாமல் காரியம் இல்லை;அந்தக் காரணம் எது என்பதைக் கண்டறிவதுதான் ,விஞ்ஞானம் என்றும் சொல்லிக் கொள்கிறோம்!என்றால் இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?என்ன மனிதா!என் கேள்வியில் அர்த்தம் இருக்கிறதா,இல்லையா? இன்னும் கேட்பேன்!

( இதன் இரண்டாம் பகுதியை ,86-ல் காண்க )
                                                                                

28 Happy birth day

Happy Birth Day



Happy birthday to you!
And happy birthday to you!
May God bless you! and we bless you!
May all bless you!
Share the sweets among your friends;
And swear to perform greater trends!
Be as brisk as bee;
And don't be still as ghee;
Keep your body healthy;
That will make you wealthy;
Have ever faith in God;
And save your mind in good;
Birthday comes here once in year;
But sure we have that every year;
Wish you to be worthy and gay;
And many more happy returns of the day!! 


                                                                                          

Sunday, March 25, 2012

27 ivarkaL manidharkaLaam !

இவர்கள்மனிதர்களாம்!             



நெறிகள் மாறிடினும் திரளும் சேனையனை,
நாடுவார்க ளிந்த உலகிலே!
நெறிகள் தேரிடினும் மருளும் தனியனெனின்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!
மறைவில்தீ செயினும் வலிவில் பெரியவனை ,
நாடுவார்க ளிந்த உலகிலே!
கறைபடா அவனும் உருவில் எளியனெனின்
தேடுவார்க ளிலை மண்ணிலே!
நிறையிலா ஒருவன் நிறங்கள் காட்டுமெனின்,
நாடுவார்க ளிந்த உலகிலே!
நிறமிலா னொருவன் திறங்கள்கூட் டிடினும்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!
அறிவிலா னெனினும் பொருளைச்சேர்க்கு மெனின்,
நாடுவார்க ளிந்த உலகிலே!
அறிவுசேர்த் தொருவன் திருவிலா னெனினும்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!

நெஞ்சமே அறிய பிறரைக் கொல்லுவார் !
நெஞ்சமே அறிய பொருளைக் கொள்ளுவார்!
நெஞ்சமே அறிய கள்ளை உண்ணுவார்!
நெஞ்சமே அறிய மாதர் நண்ணுவார்!
நெஞ்சமே அறிய பொய்கள் சொல்லுவார்!
நஞ்சவை என்றே அறிந்துமாம்!
  
வஞ்சமாய்ப் பிறரைத் துஞ்சவைத் திடினும்,
வஞ்சமாய்ப் பொருளைக் கொள்ளைகொண் டிடினும்,
வஞ்சமாய் மறைவில் மயக்குகள் ளுணினும்,
வஞ்சமாய்ப் பிறரின் மாதர்விரும் பிடினும்,
வஞ்சமாய் அஞ்சும் பொய்கள் சொல்லிடினும்,
பஞ்சமா கொடிய பாவமாம் !
                                                                                                                                                
                                                                                                                 


                                                                                         

Saturday, March 24, 2012

26 KaNakkup paarppOmaa ?

                           கணக்குப்பார்ப்போமா?கணக்கு!                                                




                                                                                         
                                           


ஆண்டுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்பூமிசூரியனைச்சுற்றிக்
கொண்டிருக்கின்றது!
அந்தக்கணக்கிலேதான்பருவகாலங்களும்மாறிமாறிவந்துகொண்டிருக்
கின்றன!
அதேகணக்கிலேதான்கல்விநிலையங்களில்தேர்வுகளும்நடந்துகொண்
டிருக்கின்றன!
மாதத்துக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்சந்திரன்பூமியைச்சுற்றிக்
கொண்டிருக்கின்றது!
அந்தக்கணக்கிலேதான்அமாவாசையும்பௌர்ணமியும்அடுத்தடுத்து
வந்துகொண்டிருக்கின்றன!
அதேகணக்கிலேதான்தொழிலாளர்களுக்குமாதஊதியமும்வழங்கப்
படுகின்றது!
வாரத்துக்குஇத்தனைமுறைஎன்றகணக்கிலேதான்வகுப்பில்பாடங்கள்
நடத்தப்படுகின்றன!
நாளுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்பூமியும்தன்னைத்தானேசுற்றிக்
கொள்கிறது!
நாளுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்குளித்துக்கொண்டிருக்கின்றோம்!
இரண்டுமுறைஎன்றகணக்கில்குளிப்பவர்களும்உண்டு!
உடம்பில்அழுக்கேஇல்லைஎன்றகணக்கில்குளிக்காதவர்களும்உண்டு!நாளுக்கு மூன்றுமுறைஎன்றகணக்கிலேதான்நாம்சாப்பிட்டுக்கொண்டிருக்
கிறோம்!
சாப்பிடுவதற்குஎன்னகணக்கு? என்றகணக்கில்சிலர்பலமுறைசாப்பிட்டு
மலைப்பாம்புக்கணக்காய்அசையாமல்இருப்பவர்களும்,
சாப்பிடஒன்றுமேயில்லைஎன்றகணக்கிலும்,பசியேஇல்லைஎன்றகணக்
கிலும்சாப்பிடாதபடியால்,அசையாமல்இருப்பவர்களும்உண்டு!
இதேகணக்கிலேதான்திரையரங்குகளில்திரைப்படங்களும்ஓட்டப்
படுகின்றன!
ஓட்டல்களில்கல்லாப்பெட்டியில்இருக்கின்றமுதலாளி"இவர்சாப்பிட்ட
தற்குஎன்னகணக்கு" என்றுகேட்டுவிடக்கூடாதேஎன்றகணக்கில்தான்,
சப்ளையர்கள்அதைக்கணக்காகஒருதுண்டுசீட்டிலேஎழுதிக்கொடுத்து
விடுகிறார்கள்!
எதிலும்கணக்குவேண்டுமேஎன்றகணக்கில்பூசணிக்காய்போனகணக்கை
விட்டுவிட்டு,கடுகுபோனகணக்குக்குகணக்குக்கேட்பவர்களும்உண்டு!
ஐந்துரூபாய்போனகணக்குக்காகஐந்தாயிரம்செலவளிக்கும்,கணக்குகளும்,
உண்டு;
மணிக்குஅறுபதுநிமிடங்கள்என்றகணக்கிலேதான்நேரமும்
போய்க்கொண்டேயிருக்கிறது!
அதேமணிக்குஇவ்வளவுவேகம்என்றகணக்கிலேதான்வண்டிகளும்
சாலைகளில்ஓடிக்கொண்டிருக்கின்றன!
கிலோவுக்கும்மீட்டருக்கும்இத்தனைரூபாய்என்றகணக்கிலேதான்
பொருட்களைவிற்கிறார்கள்;நாமும்வாங்குகிறோம்;
நூற்றுக்குஇவ்வளவுஎன்றகணக்கிலேதான்பள்ளிகளில்தேர்வுக்கு
மதிப்பெண்கள்வழங்கப்படுகின்றன;
அதேகணக்கிலேதான்பணத்துக்குவட்டியும்வாங்கப்படுகின்றது;
தலைக்குஇவ்வளவுஎன்றகணக்கிலேதான்அரசாங்கத்தால்உணவுப்பங்கீடு
செய்யப்படுகின்றது!
உடுத்துவதற்குஇவ்வளவுநீளம்என்றகணக்கிலேதான்சேலைகள்நெய்யப்
படுகின்றன;
இருப்பதற்குஇவ்வளவுபோதும்என்றகணக்கிலேதான்வீடுகள்கட்டப்
படுகின்றன!
இவ்வளவுநேரத்துக்குப்புறப்பட்டால்,இவ்வளவுநேரத்துக்குள்போய்ச்
சேரலாம்என்றகணக்கிலேதான்நாம்பயணங்களைமேற்கொள்கின்றோம்;
ஐந்தாண்டுகளுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்பொதுவாகத்தேர்தல்
கள்நடத்தப்படுகின்றன;என்றாலும்,
சிலசமயங்களில்ஐந்தாண்டுகளுக்குள்,பலமுறைஎன்றகணக்கில்நடப்பதும்
உண்டு;
ஆறுமாதங்களுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்வங்கிகளில்
இருப்புகள்சரிபார்க்கப்படுகின்றன!
நாம்இருவர்,நமக்குஒருவர்என்றகணக்கிலேதான்குடும்பநலத்திட்டங்கள்
தீட்டப்படுகின்றன;
வருமானத்தின்கணக்கிலேதான்பச்சை,சிவப்பு,மஞ்சள்என்றகணக்கில்
குடும்பஅட்டைகள்வழங்கப்படுகின்றன;
வயதுபதினெட்டுஎன்றகணக்கிலேதான்வாக்களிக்கும்உரிமைவழங்கப்
படுகின்றது;
வயதுக்குக்கணக்குஇல்லாமல்உயரம்என்றகணக்கிலேதான்பேருந்துகளில்
சிறுவர்களுக்குப்பாதிஎன்றகணக்கில், டிக்கட்டுகள்அளிக்கப்படுகின்றன;

வட்டிக்கணக்குஎதுவுமில்லாமல்வீட்டுக்குஆள்வேண்டுமேஎன்றகணக்கிலே
தான்கிராமங்களில்பிள்ளைகளுக்குதிருமணங்கள்நிச்சயிக்கப்படுகின்றன;
வேலைக்காரிவேண்டும்என்றுபெண்கேட்டால்யாரும்தரமாட்டார்கள்என்ற
கணக்கோடுவருகின்றமருமகளும்கோபித்துக்கொள்வாளேஎன்றகணக்கும்
இதில்இருக்கிறது!
வீட்டில் அதைச் செய்தேன்,இதை வாங்கினேன் என்ற கணக்கிலே தான்
பெண்கள் பெருந்தொகையைச் சேர்த்து வைக்கிறார்கள்;
இருந்தால் ஒரு அவசரத்துக்கு உதவும் என்ற கணக்கோடு, நமக்குத் தெரிந்து
சேமித்தால், நாம் அதைச் செலவளித்து விடுவோம் என்ற கணக்கும் இதில்
அடக்கம்;
ஏனென் றால் வரவுக்குள் செலவு என்ற கணக்கிலே தான் நாம் வாழ
வேண்டியிருக்கின்றது!
என்றாவது ஒருநாள் உயர்வோம் என்ற கணக்கிலேதான் நம்பிக்கையோடு
நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!
இத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கிலேதான் வால் நட்சத்
திரங்கள்வந்துகொண்டிருக்கின்றன;
எப்போதாவது ஒரு நாள் என்ற கணக்கிலே தான் நானும் வந்து இப்போது
உங்களை அறுத்துக் கொண்டிருக்கின்றேன்!
எப்போதாவது ஒருமுறைதானே என்ற கணக்கிலே தான் நீங்களும் என்னை
நொந்து கொள்ளாமல், இதைப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்!

"திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்;திறமைகள் பெருக்கப்பட வேண்டும்;
தேவைகள் கூட்டப்பட வேண்டும்;தேவையற்றவை கழிக்கப் பட வேண்டும்."
என்ற கணக்கிலே தான் நமது முன்னோர்,நாளுக்கு இரண்டு,வாரத்துக்கு
இரண்டு,மாதத்துக்கு இரண்டு,வருடத்துக்கு இரண்டு என்று நாம் கணக்காகச்
செய்ய வேண்டிய சிலவற்றை ஒரு கணக்காகவே எழுதி வைத்தார்கள்!
அது கணக்காக இருப்பதால் யாரும் அதைச் செய்து பார்ப்பதில்லை;ஏனென்
றால் நான் கணக்கில் சூரப்புலி என்று சொல்லி, போட்டுப்பார்த்து ஒருவேளை
கோட்டை விட்டுவிடுவோமோ?என்ற கிலி!
கணக்கில் நூறு மதிப்பெண்கள் வாங்கிய ஒரு பையனிடம் ,"தம்பி !சதுரத்தின்
பரப்பளவு எவ்வளவு?"என்றேன்.அவன் ஏதோ ஒரு கணக்காய் என்னைப்
பார்த்தான்;எனக்குத் தெரியவில்லை,அதனால் தான் கேட்கிறேன் என்ற கணக்
கிலாவது,அல்லது அவனுக்குத் தெரிகிறதா?பார்ப்போம் என்ற கணக்கிலே
தான் கேட்கிறார் போலும் என்ற கணக்கிலாவது சொல்லி இருக்கலாம்;
ஆனால் ,அவன் எந்தக் கணக்கும் இல்லாத கணக்கில்,"அந்தக் கணக்கு
உங்களுக்கு எதற்கு?" என்றான்!
எப்படியோ தேர்வுக் கணக்குகளை,ஏதோ ஒரு கணக்கில் கணக்காகப்
போட்டுவிட்டான்,என்பது தான் கணக்கு!
இப்படித்தான்! சிலருக்கு பிறரிடம்கணக்குக்கேட்பதென்றால்பிடிக்கும்;ஆனால்
அவர்களிடம் யாராவது கணக்குக் கேட்டால்,அது அவர்களுக்குப் பிடிக்காது!கணக்கின் அடிப்படையிலே தான் பல கட்சிகளும் தோன்றி, வளர்ச்சி
யடைந்துள்ளன, என்ற கணக்கைப் பார்க்கும்போது,கணக்கின்அடிப்படையிலே
மட்டும் தான் நாடும் வீடும் கூடக் கணக்காகவளரும்என்பதுஒருகணக்காகவே
புரியும்!
சிலர்கணக்கைப்பார்ப்பார்கள்!ஆனால்போடத்தெரியாது!எட்டும்எட்டும் பதி
னாறு என்பதற்குப் பதிலாக பதின்மூன்று, என்று கணக்கிருந்தால், சரி என்ற
கணக்கோடுவந்துவிடுவார்கள் கணக்கைப்பார்த்தார்கள்,போடத்தெரிய
வில்லை;சரி,என்றகணக்கோடுவந்துவிட்டார்கள்!அப்படித்தான்,என் அலுவல
கக் கணக்கும்!கணக்கிலிருந்தரூபாய்இருபது ஐம்பதிலிருந்து,இருபதுஎடுத்து செலவு செய்து விட்டேன், செலவு போக மீதி ஐம்பதுபைசா,என்று
கணக்கெழுதாமல் மறதியாகமீதி ரூபாய் ஐந்து என்று எழுதி விட்டேன்!கணக்குப் பார்ப்பவர் வந்தார்!கணக்கைப் போட்டே பார்த்தார்!"ஐம்பது பைசா
எங்கே?"என்றார்!"ஐயா,மீதி ஐந்து ரூபாய் வராது! ஆனால்,வந்திருக்கிறது!நீங்கள் கேட்ட அந்த ஐம்பது பைசா இந்த ஐந்து ரூபாயில்
இருக்கிறது!,என்றுவைத்துக் கொள்ளுங்களேன்!" என்றேன்!"அதெல்லாம்
எனக்குத் தெரியாது!அந்த ஐம்பது பைசாவுக்குக் கணக்கு வேண்டும் என்ற
கணக்கில் அடம் பிடித்தார்!;அவரது பிடிவாதக் கணக்கால்,வேறு
வழியில்லாமல் என் பைக்கணக்கிலிருந்து ஒரு ஐம்பது பைசா கணக்கைக்
கழித்தேன் ! இது ஒரு தப்புக் கணக்கு!கணக்குப் பார்ப்பதோடு ,அது
எப்படிப்பட்ட கணக்கு என்றும் பார்க்க வேண்டும்;மொத்தத்தில் கணக்குப்
பார்க்கவும் கணக்கைப் பார்க்கவும் ,அதோடு கணக்குப் போடவும்
தெரியவேண்டும்!சிலர் இருப்புக் கணக்கைப் பார்த்து,கணக்குப்
போட்டு,கணக்கில் ஏதோ குறைகிறதே என்று கையைப் பிசைவார்கள்!என்னசெய்தோம் ,ஏன் குறைகிறது என்ற கணக்கை மறந்துவிடுவார்கள் !அதனால் கணக்குக்கு ஞாபகமறதிஎன்ற கணக்கு கூடவே கூடாது !அடேயப்பா
இத்தனை கணக்குகளா? என்று திகைத்து ,நீங்கள் வாயைத்திறக்கும் கணக்கு
எனக்கு நன்றாகவே தெரிகிறது!ஒரு கணக்கில் அது மூன்று அங்குல
நீளமா?,உயரமா? அல்லது அகலமா? என்ற கணக்கு தான் புரியவில்லை!அதனால் அது மூன்று அங்குலம் மட்டுமே என்ற கணக்குத் தெரியும்போது
இதற்கு மேலும் கணக்குகள் இருக்கிறது,என்று நான் சொன்னால் அந்த மூன்று
அங்குலக் கணக்கிற்கு மேல் வாயைத் திறக்கும் கணக்கு இல்லை என்பதால்
உங்கள் மேல் பரிதாபப் பட்டு இந்த புள்ளி விபரக் கணக்கு போதும் என்று
நினைக்கிறேன்!உங்கள் கணக்கைக் கேட்ட என் பிள்ளைக்கு வாய் கிழிந்த
கணக்கு,என்ன கணக்கு என்று கேட்டு,உங்கள் பெற்றோர்,என்னோடு
சண்டைக்கு வந்தால்,என் கணக்கு என்னாவது?என்ற கணக்கில் எனக்காக
நான் போட்ட பரிதாபக் கணக்கும் இதில் அடங்கும்!

                                                                                          
                                                                                                                                                                                                                             
எனவே,எங்கு பார்த்தாலும் கணக்கு!எப்படிப் பார்த்தாலும் கணக்கு!எல்லாவற்
றிலுமேகணக்கு!எதில்எல்லாம்கணக்கு இருக்கிறது என்றுகணக்குப்போட
முடியாது!
ஆனால்,எதிலாவதுகணக்குஇல்லாமல்இருக்கிறதாஎன்றுகணக்குப்போடுவதுஎளிது!"நமக்குள்என்னய்யாகணக்கு?"என்பார்கள்,சிலர்!அங்குதான்நாம் கணக்
காக இருக்க வேண்டும்!இல்லைஎன்றால்,கணக்கேஇல்லாதகஷ்டத்தில்,
நம்மை சிக்க வைத்துவிட்டுஅவர்கள் போய்விடுவார்கள்!
எனவே கணக்கின்படி,பூமி சூரியனைச் சுற்றாமல் விட்டால்,
கணக்கின்படி,சந்திரன் பூமியைச் சுற்றாமல் விட்டால்,
கணக்கின்படி,பூமி,தன்னைத்தானே சுற்றிக் கொள்ளாமல் விட்டால்,
கணக்கின்படி,நாமும் நடந்து கொள்ளாமல் விட்டால்,
கணக்கே இல்லாமல்,பிள்ளைகளைப் பெற்ற கணக்கால் கஷ்டப்பட்டு,
குசேலன்,கண்ணனைத் தேடிப் போன கணக்காய்,
நல்லதங்காள் கிணற்றைத் தேடிப்போன கணக்காய்,
ஆன முதலில் அதிகம் செலவானால்,
மானம் அழிந்து மதிகெட்டுப் --போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்,
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு ------என்ற பழைய வரவு செலவுக் கணக்கின்
படி ,கணக்குகளே இல்லாமற்போய், செயல்களில்சுணக்கங்கள் ஏற்பட்டு,அத
னால் பிணக்குகளும் ஏற்பட்டு,நல்ல இணக்கங்கள் வேறுபட்டு,கணக்கே இல்
லாத, கஷ்டங்கள் ஏற்பட்டு, வணக்கத்துக்குரிய நமது வாழ்க்கை பெரிதும்
பாதிக்கப்பட்டு, விளையும் தயக்கத்தால், வருத்தப்பட்டு நாம் மயக்கம் போட்டு
விழவும் நேரிடும்! எனவே, உங்கள் கணக்கில் நீங்கள் கணக்காக
இருக்கவேண்டும் என்ற கணக்கை,கணக்காகக்காலத்தில் சொல்கிறேன்!"இது
ஒரு கணக்கா?" என்று நான் சொல்வதை நீங்கள் கணக்கில் கொள்ளாமல்
விட்டால், அதை தப்புக் கணக்கு என்று தான் நான் சொல்லவேண்டி
இருக்கும்!"என்னடா? இவன் கணக்கு ,கணக்கு என்றுஅறுக்கின்றானே! இவன்
கணக்காக இருக்கின்றானா? என்ற கணக்கில் நான் பேசுவது என்ன கணக்கு?என்று நீங்கள் ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்பதற்கு முன்னால் நானே ஒரு
கணக்கோடு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!
கணக்குப் பார்த்துக் கொடுத்து, கணக்கைப் பார்த்துப் பார்த்து,
கலக்கம் அடைவார்கள் சிலர்!
கணக்குப் பார்க்காது வாங்கி, கணக்கே பார்க்காமல்,
கலங்கவே மாட்டார்கள் பலர்!
அதனால் தான் ஒருசிலர்,அந்தக் கணக்கே வேண்டாம் என்பார்கள்!
ஏனென்றால், அவர்கள் கணக்கு, போட்டு,பார்த்தவர்கள் ! நன்றி ! வணக்கம் !

    

                                                                                                        

Friday, March 23, 2012

25 Sudhandhiram-highlight


சுதந்திரம்!!!







                 


                                                                               
எங்கள் தலைவர்களே!

தங்கம் நிகர் தாய்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டு ,உங்கள் அங்க
மிழந்து ,ஆவியிழந்து ,அத்தனையும் இழந்து இன்று ,அமரர்களாகி
விட்ட ,எங்கள் தியாகத்தளைவர்களே ! வணங்குகிறோம் ! ஒர்ஆண்
டின் இந்த ஒரு நாளிலாவது உங்களை ,நினைத்துக் கொள்கிறோம் !
ஏன் என்றால் இன்று நீங்கள் இல்லை ! இருந்திருந்தால்,
என்றோமறந்திருப்போம் !ஆம் இதற்காகவா?பெற்றோம் என்று
நீங்கள்ஏங்க,அது கண்டு பொறாத நாங்கள் உங்களை மறக்கத்தான்
எங்களுக்கு சுதந்திரம்இருக்கிறதே !கட்டுப்பாடற்ற நிலையில் ;
யாரும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் ! சுதந்திரத்திலே என்ன
கட்டுப்பாடு ? என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் ! ஆனால் இவர்கள்
கேட்கிறார்கள் !என்ன ?சுதந்திரத்திலே ஒரு கட்டுப்பாடா ?என்று !
ஆம் !எங்கள் தலைவர்களே ! எதையும் செய்வதே சுதந்திரம் என்பதற்
காக எதையெல்லாமோ செய்கிறார்கள் ! சாலையில் நடக்க ,சுதந்
திரம் உண்டு என்பதற்காக , அடுத்தவர் நடக்கத் தடையாக அடைத்
துக்கொண்டே நடப்பேன் என்கிறார்கள் ! பணம் சேர்ப்பது சுதந்திர
மாம் ! அதனால் பகற்கொள்ளை யடித்து ,பிறர் தம் உடமைகளைப்
பறிப்பேன் என்கிறார்கள் ! எம்மதமும் சம்மதமே என்னும் மத சுதந்
திரம் உண்டு ,என்பதால் ,மற்ற மதத்தானைக் கேலி செய்து தூற்றி,
என் மதத்தை ஏற்றுக்கொள் என்று கட்டாயப் படுத்துகிறார்கள் ! மத
சார்பற்ற நாடு என்பதற்கு என்ன பொருள் என்று எங்களுக்கு விளக்
குவீர்களா எங்கள் தலைவர்களே ! நள்ளிரவிலே ,தன்னந்தனிமை
யில் ,ஒரு பெண் அச்சமில்லாமல் நடக்கும் நிலை என்று வருகின்
றதோ , அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது ,என்பேன்
என்றார் மகாத்மா ! ஆனால் எங்கள் தலைவர்களே ! இரவில் அல்ல ;
பகலிலும் கூட :ஒரு பெண் அல்ல ; ஆண்கள் கூட்டமே கூட ;பய
ணம்செய்ய முடியாத நிலை இன்று ! இது சுதந்திரமா ?



வன் முறைகள்
வேடிக்கையாகி விட்டன !வழிப்பறிகள் வாடிக்கையாகி விட்டன !
கொலைகள் கலைகளாகி விட்டன ! கற்பழிப்புகள் அன்பளிப்புக
ளாகி விட்டன ! இந்நிலை வரவா அன்னியரை விரட்டினோம் ?
பேச்சைக் குறைக்கச்சொன்னீர்கள் ! நீங்கள் ! உழைப்பைக் குறைத்
துக் கொண்டோம் நாங்கள் ! வேலை இல்லாமையைப் போக்குவ
தற்கு மாறாக ,வேலை வாய்ப்பையே போக்கிக் கொண்டிருக்கி
றோம் ! மக்களுக்கு உழைப்பதற்காக பதவிக்குச் சென்றவர்கள் தங்களுக்காகவும் ,தங்கள் மக்களுக்காகவும் உழைப்பதே சுதந்திரம்
என்கிறார்கள் !உரிமை கேட்கிறோம் என்ற பெயரில் ,தீப்பந்தம்
ஏந்திக் கொளுத்துவதே சுதந்திரம் என்கிறார்கள் ! அஹிம்சை வழி
காட்டினீர்கள் நீங்கள் !இம்சையே வழி என்கிறார்கள் இவர்கள் !
எளிமையாக வாழ்ந்து காட்டினீர்கள் நீங்கள் ! ஆடம்பரமாக,
வாழ்ந்து கொண்டு , எளிமையாக வாழுங்கள் என்று எங்களுக்குச்
சொல்கிறார்கள் இவர்கள் ! பொய் பேசத் தெரியாது உங்களுக்கு !
உண்மை பேசத்தெரியாது இவர்களுக்கு ! பிற மாதர்களைத் தங்கை
யராக எண்ணச் சொல்வது அடக்கு முறையாம் ! அனைவரையும்
தம் மனைவியராக நடத்துவதே அறிவுடமையாம் ! நம் வீடு ,நம் நாடு
என ஒன்றுபடுவது மடமையின்பாற்பட்டதாம் ! என்வீடு ,தனி நாடு
எனக் கொடி பிடித்துக் குழப்புவதே அறிவின் வெளிப்பாடாம் ! பொதுச்
சொத்துக்களும் நமது சொத்துக்களே என்பதற்காக ,அவற்றை சேதப்
படுத்துவதும் எங்கள் சுதந்திரமே என்கிறார்கள் ! நமது கண்கள் தான்
என்பதற்காக ,யாரும் அதைக் குத்திக் கொள்வார்களா எங்கள் தலை
வர்களே ! நாடு இரவில் தான் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக ,
இன்னும்நாம் உறங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா ?
விழிக்க வேண்டாமா ? அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை ,
பெற்றுத்தான் இருக்கின்றோம் ! அனைத்துத் துறைகளிலும்
முன்னேற்றம் எட்டித்தான் இருக்கின்றோம் !உலகினர் முன்னே
ஓர் உன்னத நிலையை அடைந்து தான் இருக்கின்றோம் !
ஆனால் ,நமக்காகவே என்று ஒரு நெறியை வகுத்துக் கொண்
டிருக்கின்றோமா ? அந்த நெறி நின்று நாம் வாழ்ந்து கொண்டி
ருக்கின்றோமா ? அதற்காக முயன்று பார்த்திருக்கின்றோமா ?
முன்னேற்றத்தின் முழுப்பயனையும் நுகர ,நாம் பெற்ற இந்த ஒரு
விடுதலை போதுமா ? வறுமையிலிருந்து விடுதலை பெற்று விட்
டோமா ?வன்முறையிலிருந்து விடுதலை பெற்று விட்டோமா ?
இனவெறியிலிருந்து விடுதலை ,மொழி வெறியிலிருந்து விடுதலை,
சாதி வெறியிலிருந்தும் ,தீண்டாமை வெறியிலிருந்தும் ,ஆகிய
விடுதலைகளைப் பெற வேண்டாமா ? அதற்காக நாம் முயல
வேண்டாமா ? அவ்வாறு முயல முனைய வேண்டாமா ? அந்த
முயற்சியைத் தொடங்கும் நாளே ,சுதந்திரத் தென்றல் வீசத் தொடங்
கும்நன்னாளாகும் ? அந்நாளே முன்னேற்றத்தை நோக்கி நாம் பீடு
நடைபோடும் பொன்னாளாகும் ? அந்நாள் விரைந்து வருதற்கும்,
அம்முயற்சியை இன்றே தொடங்குவதற்கும் , இப்பொன்னாளிலே
நாங்கள் உறுதி ஏற்றுக் கொள்கிறோம் ?அதற்கு எங்களைவாழ்த்
துங்கள் !எங்கள் தலைவர்களே !
வணக்கம் ! வாழ்க சுதந்திரம் ! வெல்க பாரதம் !