1 - கல்லா ? கடவுளா ?
ஆரம்பம்
யாரோ ? காவி கட்டிய , சந்நியாசியாம் ;
பரதேசிக் கோலத்திலே , வந்திருக்கிறாராம்
!
அவர் , இந்தியாவின் , இந்து மதப் பிரதிநிதியாம் ! என்று , ஏளனமாய் எல்லோரும் பார்க்கிறார்கள்
;
கோட்டும் , சூட்டும் , போட்டு , வசதியாக வந்தவர்கள் , எல்லாம் கம்பீரமாக , கார்களில் இருந்து , இறங்கி , சர்வ
மரியாதையோடு , அழைத்துச் செல்லப்படுகிறார்கள் ;
காவி உடையும் , காவி வேட்டியும் கட்டி , வா என்று அழைக்கக் கூட , ஆள் யாரும் , இல்லாமல் , எவர் துணையுமின்றி , நடையாய் , நடந்து வந்து சேர்கிறார் , இவர் ; இதுதான் , மகாநாடு , நடக்கப் போகும் , இடமா ? என்று அவருக்குள்ளாகவே கேட்டு , அவராகவே , உள்ளே செல்கிறார் ; அது ஒரு பிரம்மாண்டமான மண்டபம் ; அங்கே தான் உலக மத மகாநாடு நடக்கப்போகிறது
! இவர் , என்ன , பேசிவிடப்
போகிறார் ? என்று , ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே , அனுமதிக்கப் படுகிறார் ; " சீமான்களே ! சீமாட்டிகளே ! " என்று ஆர்ப்பாட்டமாய்
, ஆரம்பித்துப் பேசி , அமர்ந்தவர்களுக்கு , நடுவே , அமைதியாய் எழுந்து , நின்று , எந்தவிதமான பதட்டமோ ? அச்சமோ ? இல்லாமல் ,
" சகோதரர்களே ! சகோதரிகளே ! " என்று , தொடங்கி , அனைவரையும் பிரமிக்க வைத்து
, அவருக்கு , அளிக்கப்பட்ட
ஐந்து நிமிடங்களையும்
, அவையினர் கை தட்டியே , எடுத்துக் கொண்ட பிறகும் , அவர்களின் ஒப்புதலோடு ,
தொடர்ந்து பேசுகிறார் ; " கூட இருப்பவர்களைக்கூட , சீமான்களாகவும்
, சீமாட்டிகளாகவும் பார்க்கின்றீர்கள்
, உங்கள் நாட்டில் ;
2
முழக்கம்
அவர்களை , சகோதரர்களாகவும்
, சகோதரிகளாகவும் , பார்க்கச் சொல்வதற்காக நான் , இங்கு வந்திருக்கிறேன்
! உங்களோடு இருக்கும் உங்கள் ஊரினரையே , வேறுபடுத்திப் பார்க்கும் , உங்களுக்கு , யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ! என்று , எடுத்துக் கூற வந்திருக்கிறேன் !
சமத்துவம் , சகோதரத்துவம் ,
சகிப்புத்தன்மை , ஆகியவற்றைப் போதித்த , இந்து மதமே , என் மதம் என்று
, சொல்வதற்காக நான் , இங்கு வந்திருக்கிறேன்
! அதுவே அனைத்து மதங்களுக்கும் , வழிகாட்டும் முதல் மதம் என்று , பெருமையோடு , பறை சாற்றுவதற்காகவும்
, நான் இங்கு வந்திருக்கிறேன் !
விழிமின் ! எழுமின் ! உழைமின் ! என்று , அறைகூவல் விடுக்கிறேன் !
உங்கள் உறக்கத்திலிருந்து
, விழித்து எழுங்கள் , என்று கூறி , உங்களைத் தட்டி எழுப்பவே , நான் இங்கு வந்திருக்கிறேன்
! இந்துமதத்தின் , பிரதிநிதியாக ,
இந்தியாவிலிருந்து , நான் , இங்கு வந்திருக்கின்றேன்
" என்று , ஒரு மணி நேரத்திற்கும்
, மேலாக , முழங்கி
, சாது போலத் தெரிந்த அவரா ? இப்படிப் பேசுகிறார் , என்று , எல்லோரையும் வியக்கவும் , திகைக்கவும் வைத்து , பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரை , குருவாக , வரித்துக்கொண்டவரும் ,
சகோதரி நிவேதிதை போன்ற எண்ணற்ற வெளிநாட்ட வரையும் , தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டவருமான , சுவாமி விவேகானந்தர் ,
அமெரிக்காவின் , சிகாகோ நகரில் நடந்த , உலக அனைத்து மத மகாநாட்டில் , நமது , இந்துமதத்தின் பெருமையை , இந்த
உலகத்துக்கு எல்லாம் , உணர்த்தி விட்டு , வந்த நேரம் அது !
சுவாமியின் , பெருமையும் , புகழும் , நம் நாடு மட்டுமின்றி , உலகமெங்கும் , பரவிக் கொண்டிருந்த , நேரம் அது !
3- கல்லா ? கடவுளா ?
எத்தனை கடவுள் ?
சுவாமியின் திறமையை அறிந்து , இந்தியாவின் சமஸ்தான மன்னரெல்லாம் , அவரை , அழைத்து , கௌரவித்து , அவர் தம் அறவுரையைக் கேட்டு மகிழ்ந்த காலம் அது ! அத்தகையோரில் , வங்கதேச மன்னரும் , ஒருவராக , அவரைத் தம் விருந்தினராக , விரும்பி அழைத்திருந்த , அந்த நேரத்தில் , அங்கே , ஒரு நாள் ..
வங்க தேச மன்னரின் அவையில் , அனைவர் முன்பும் , சுவாமி , அறவுரை ஆற்றிக் கொண்டிருந்தார் ; அனைவரின் முகங்களையும் , கூர்ந்து , நோக்கிக் கொண்டிருந்த சுவாமி , மன்னரின் முகத்தையும் நோக்கினார் ! அதில் , ஓர் ஐயத்தின் சாயல் தெரிவது கண்டு , வினவினார் ; " தயக்கம் வேண்டாம் ! தைரியமாய்க் கேளுங்கள் ! என்ன சந்தேகம் ? "
" ஒன்றுமில்லை ; மன்னிக்க வேண்டும் ! இந்து மதம் , சிறந்த மதம் தான் ; எனக்கு , அதில் கருத்து வேறுபாடு , இல்லை ! எனக்கு சில , ஐயப்பாடுகள் உண்டு ! அவற்றைத் தாங்கள் , தெளிவு செய்ய வேண்டும் ! முதலாவது ஐயம் ! கடவுள் ஒருவர் தான் , என்று சொல்கிறோம் ; அதே சமயம் , பல கடவுள்கள் இருப்பதாகச் சொல்லியும் , வணங்குகிறோம் ; இது சரிதானா ? என்று , சுவாமிகள் விளக்கம் , அளிக்க வேண்டும் , என்றார் , மன்னர் ; சுவாமி , உரையாற்றிக் கொண்டே , அவையின் உள்ளே , சுவர்களில் , மாட்டப் பட்டிருந்த , பலவேறு நிலைகளிலான , படங்களில் , ஒன்றைக் காட்டி , " இது யார் " என்றார் ; " இது என் பாட்டனார் ; அவருடைய சிறு வயதுத் தோற்றம் " " சரி ! இது ? " " இதுவும் , அவர்தான் ! அவருக்கு மணமான போது " " இது ? " " இது , அவருடைய வயோதிகத் தோற்றம் ; இதுவும் தான் ! " "அப்படியா ? " " நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா ? " " இல்லை " " அதாவது , உங்கள் பாட்டனாரைப் பார்க்காமலேயே அவரை பல வடிவங்களில் , பல நிலைகளில் படமாகப் பார்த்து
, மரியாதை செய்கிறீர்கள்
! அப்படித்தானே ? " மன்னருக்கு ஒன்றும் , புரியவில்லை ;
4
கடவுளின் தோற்றங்கள்
நாம் ஒன்று கேட்டால் , இவர் ஏதேதோ பேசுகிறாரே! சரி
என்ன சொல்கிறார் , என்று பார்ப்போம் , என்று , எண்ணிக் கொண்டார். " அது இருக்கட்டும் ; அதோ , உங்கள் அரியணைக்கு அருகே , ஒரு இளைஞன் அமர்ந்திருக்கிறானே ? அது யார் ? " என்று வினவினார் சுவாமி ; " என் மைந்தன் ; நாளை , அரியணை , ஏற இருப்பவன் " " ஓ அப்படியா ? மிகவும் மகிழ்ச்சி ! உங்களுக்கு மகன் ! உங்கள் , தந்தையாருக்கு ? " " இது என்ன கேள்வி சுவாமி ? அவருக்குப் பேரன்! " " கேளுங்கள் மன்னா ! அது மட்டுமில்லை ; அவனுடைய மாமாவுக்கு , அவன் , மருமகன்; அவனுடைய அண்ணனுக்கு , அவன் , தம்பி ! அவனுடைய தம்பிக்கு , அண்ணன் ! அவனுடைய
ஆசிரியருக்கு , அவன் , மாணவன் ! அவனுடைய நண்பனுக்கு , அவன் , நண்பன் ! நாளை அவனுக்கு , மணமுடிக்கும்போது , அவன் , ஒரு பெண்ணுக்கு , கணவன் ! அவனுக்கு முடி சூட்டும் போது, மன்னன் ! குழந்தை பெற்றுக் கொண்டால் , அவன் தந்தை ! மாமனார் ; பாட்டனார் ; என்று , பல உருவங்களைத் தாங்கப் போகின்றான் ; மற்றவர்கள் எல்லாம் , அவரவர்க்கு உள்ள உறவு முறையில் , அவனுக்கு மரியாதை செலுத்துவர் ! ஆனால் , அவன் உங்களுக்கு மைந்தன் தான் ! உங்கள் , மைந்தன் தான் , கடவுள் ! அவன் ஒருவன் தான் ! மற்றவர்களுக்கு
, வேறு , வேறு வடிவங்களில் , காட்சி தருகிறான் ; உங்கள் தந்தையையே , நீங்கள் , நான்கு தோற்றங்களில் , பார்க்கிறீர்கள்
! கடவுளால் , படைக்கப்பட்ட நமக்கே , இத்தனை தோற்றங்கள் என்றால் , நம்மை எல்லாம் படைத்த , அந்த கடவுளுக்கு எத்தனை , தோற்றங்கள் இராது ? இருக்க வேண்டும் ? பல்வேறு நிலைகளில் , பலருக்கும் , பல வடிவங்களாகத் தெரிகிறார் ! தாங்கள் , இங்கிருக்கும் கோலத்திலேயே , அந்தப்புரத்திலும்
இருப்பீர்களா ? இதே , கோலத்திலேயே , போர்க்களத்துக்கும் , போவீர்களா ?
5- கல்லா ? கடவுளா ?
உனக்காக , நானா ?
எத்தனை கோலங்களில் , நீங்கள் , சென்றாலும் , அது , நீங்கள் தான் ! அவ்வாறே , கடவுளும் திகழ்கிறார் ! இதில் , வியக்கவோ , இல்லை , திகைக்கவோ ஒன்றுமில்லை ! கடவுள் ஒருவர் தான் " என்ற , சுவாமியின் தெளிவுரை , மன்னரின் , சிந்தனையைக் கிளறி , விட்டது !.......
“ சுவாமி ! மன்னிக்க வேண்டும் ! இப்படித்தான் இருப்பார், என்று , கடவுளின் உருவத்தை , எப்படித் தீர்மானிக்கிறார்கள் ! கேட்டார் மன்னர் ! சுவாமி சொன்னார் ! கற்பனைக்கு எட்டாத ஒன்றைக் காட்சிப் படுத்தும்போது , அவரவர் கருத்துக் கேற்றபடிதான் , அமைத்துக் கொள்ள முடியும் ! அப்படித்தான் அவரவர் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொள்கிறார்கள் ; உனக்கு என்ன பலகாரம் பிடிக்கும் ? என்று கேட்டால் , நாம் இதுவரை சாப்பிட்டவற்றில் பிடித்த ஒன்றைத்தான் சொல்வோமா ? அல்லது இதுவரை சாப்பிடாத பலகாரம் ஒன்றை கேட்போமா ? அது எப்படி இருக்கும் என்றே தெரியாத போது , அதை எப்படிக் கேட்க முடியும் ! கடவுளின் உருவமும் அப்படித்தான் ; நாம் இதுவரை பார்த்த மற்றும் தெரிந்த உருவங்களை வைத்துத்தான் அவனைக் காட்சிப் படுத்த முடியும் " என்றவர் , தொடர்ந்து
, " மன்னா ! என்ன சிந்தனை ? எனறு கேட்டார் ! " சுவாமி , என் அறியாமை நீங்க வேண்டும் , என்று , எனக்காக தாங்கள்தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் ! " என்றார் , மன்னர் . " என்ன ? உனக்காக நானா ? ஏன் ? நீ கேட்டால் , தரமாட்டாரா ? -----இதைக் கேள் ! என் குருநாதரிடம் நான் இருந்த போது , நடந்த நிகழ்ச்சி ஒன்றை , நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒரு நாள் , அன்னையிடம் பிரார்த்திக்கச்
சென்ற , என் குரு நாதர் , நீண்ட நேரத்திற்குப் பிறகே , வந்தார் . அவரிடம் , எப்படிக் கேட்பது , என்று தயங்கி , அவரைப் பார்த்தேன் . " " என்ன நரேந்திரா ! ( நரேந்திரர்- விவேகானந்தரின் இயற்பெயர் ) ஏன் தாமதம் , என்று கேட்க விரும்புகிறாயா? " என்றார் ;
6- கல்லா ? கடவுளா ?
நம்மால் மட்டுமே முடியும்
அவராகவே புரிந்து கொண்டு , " என் அன்னை , இன்று , என்னை வெகுநேரம் , தன்னோடு இருக்க வைத்து விட்டாள் " . என்றார் . அன்னை , அவரிடம் , மிகவும் கனிவாக நடந்து கொள்வாள் , போலும் , என்று , எண்ணிய நான் " சுவாமி ! எனக்காக நீங்கள் அவளிடம் , எனக்குத் தேவையானதை , கேட்கக் கூடாதா ? " என்றேன் . " அடடா ! அது எனக்குத் தெரியாமல் போயிற்றே ! கேட்கலாமே " என்றவர் , தொடர்ந்து , " நாளை , உன்னை அன்னையிடம் , அனுப்புகிறேன்
! உனக்கு என்ன வேண்டுமோ ! அதை நீயே அவளிடம் , கேட்டுப் பெற்றுக் கொள் " என்றவர் , அடுத்த நாள் , என்னை பூஜை அறையினுள் ,
அனுப்பினார் . வெகு நேரத்திற்குப் பிறகு , வெளியே வந்த என்னிடம் , " என்ன ? கேட்டாயா ? " என்றார் . " சுவாமி ! உள்ளே சென்ற எனக்கு, என்ன , கேட்பது என்று , எதுவும் நினைவுக்கு வரவில்லை ; அந்த பரவசமான நிலையைக் கடந்து , எதுவும் தேவை என்று , தோன்றவுமில்லை ! " என்றேன் . குருநாதர் சொன்னார் ; " அவளுக்கு , எதை , எப்போது தரவேண்டும் என்று , தெரியும் ; அது மட்டுமில்லை ; நரேந்திரா ! வேறு யார் சார்பாகவும் , நீயோ , அல்லது உன் சார்பாக , வேறு யாருமோ அவளிடம் , கேட்பதை , அவள் விரும்புவதில்லை
; அவள் எல்லோரிடமும் சம தூரத்திலேயே இருக்கிறாள் ; மனிதர்களைப் போன்று , யாருக்கும் , சிறப்புச் சலுகைகள் , வழங்குவதும் இல்லை ; உனக்கு , என்ன தேவை , என்று , நீ கேட்பதையே , அவள் , விரும்புகிறாள்
,அவள் , நம் எல்லோருக்குமே , நெருக்கமானவள் தான் ! ஒன்றைப் புரிந்து கொள் ; உனக்காக , நான் பிரார்த்தனை செய்தேன் ! அல்லது செய்கிறேன் , என்று சொல்பவர்களிடம் , எச்சரிக்கையாக
இரு ! நீ செய்யாத பிரார்த்தனையையா ? அவர்கள் செய்துவிடப் போகிறார்கள் ? நமது தேவை என்ன என்று அறிந்து கேட்க நம்மால் மட்டுமே முடியும் !
7- கல்லா ? கடவுளா ?
எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்
உனக்காக அவர்கள் , ஏன் அவ்வாறு , செய்ய வேண்டும் , என்று எண்ணிப்பார் ! ஏதோ , ஒன்றை உன்னிடம் , அவர்கள் எதிபார்க்கிறார்கள், என்பது தான் , அதன் பொருள் ! . அது மட்டுமல்ல ; யாராவது , ஒருவருக்கு என்று , உன் பிரார்த்தனையைச்
செய்யாதே ! எல்லோரும் , மகிழ்ச்சியாக , இருக்கவேண்டும் என்று கேள் !
உன் குடும்பத்தில்,
யாராவது , ஒருவர் சுகமாக இருந்து , மற்றவர் கஷ்டப்பட்டால் , அது உனக்கு மகிழ்ச்சியைத் தந்து விடுமா ? மற்றவர் , சுகமாக இருந்து , நீ கஷ்டப்பட்டால் அது அவர்களுக்கு , மகிழ்ச்சியைத் தந்து விடுமா ? உன் குடும்பம் மட்டுமல்ல ; ஊர் , நாடு , எல்லாவற்றுக்கும் , இதே முறை தான் ; அறிந்தவர்கள் , எல்லோரும் , இன்புற்றிருக்கவே நினைப்பர் ! வேண்டுவர் , என்று , என் குருநாதர் , அன்று , எனக்குச் சொன்னதை , இன்று , உனக்குச் சொல்லுகிறேன் , என்றார் , சுவாமி ! அவள் , என்று , நான் குறிப்பிட்டது
, இறைவனை ! என்று எண்ணிக் கொள் , என்றார் ! மன்னர் , தெளிவடைந்தார் ;
" சுவாமி ! பல கேள்விகளைக் கேட்டு , தங்கள் மனம் புண்படும்படி , நடந்து கொண்டு விட்டேன்
! என்னை மன்னியுங்கள்
! என் அறியாமை அகன்று விட்டது ! " ;
“ இல்லை ! இன்னும் சில ஐயப்பாடுகள்
, உன்னிடம் தெரிகின்றன ; தயங்காமல் கேள் ! " " சுவாமி ! இறைவனை எந்த மொழியில் வணங்க வேண்டும் ? " " அனைத்து மொழி பேசுகின்றவர்களையும் படைத்த அவனுக்கு , அந்த அந்த மொழிகள் தெரியாதென்றா நினைக்கிறாய் ? கேள் ! உனக்கு , ஒரு சிறு குழந்தை இருக்கிறது , என்று வைத்துக் கொள்வோம் ; அது தன் போக்கில் , காலையும் , கையையும் , ஆட்டிக் கொண்டு , ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கும் ! அது , எந்த மொழியில் பேசுகிறது ? என்று உனக்குத் தெரியுமா ? யாருக்கும் , அந்த மொழி , என்ன மொழி என்று தெரியாது ! அது குழந்தை மொழி !
8- கல்லா ? கடவுளா ?
கடவுளின் மொழி
ஆனால் அது என்ன பேசுகிறது , என்று , அதன் தந்தையும் , தாயுமான , உங்கள் இருவருக்கும் , தெரியும் ! அதாவது , அதன் பெற்றோருக்குத் தெரியும் ! அதே போலத் தான் ; நாம் எந்த மொழியில் வழிபட்டாலும் , நம்மைப் பெற்றவனாகிய , இறைவனுக்கு அதன் பொருள் தெரியும் ; இங்கே பக்தி தான் முக்கியம் ; பாஷை முக்கியமல்ல ; மற்றவரிடம் , எந்த மொழியில் , பேசினாலும் , உதடுகள் அசைவதைப் போல , இறைவனிடம் பேசும் போது , உள்ளம் அசைய வேண்டும்.! அது தான் , அவன் மொழி ! அவனிடம் , மனம் ஈடுபட வேண்டும் ! அதுதான் , முக்கியம் ! என்ன மன்னா ? " " புரிந்து கொண்டேன் , சுவாமி ! சுவாமி ! மற்றும் ஒன்று கேட்கட்டுமா ? " " விளக்கம் அளிக்கத்தானே வந்திருக்கிறேன் ! கேள் !
இறைவனுக்குப் , பலர் , படைக்கிறோம் , என்று சொல்லி , ..பலவிதமாக , எதை , எதையோ படைக்கிறார்கள் ! எதைப் படைக்க வேண்டும் , என்று , விதி ஏதும் உண்டா ? சுவாமி ? "
" பெற்றோர் தருவதைத் தான் பிள்ளைகள் சாப்பிடுவர்
! பிள்ளைகள் உண்பதைத்தான்
, பெற்றோருக்கும் தருவர் ; இறைவன் கொடுத்ததை , அவனுக்குப் படைக்கிறோம் ! நாம் சாப்பிடுவதைத் தானே, படைக்கவும் முடியும் ? உள்ளன்போடு சமர்ப்பிக்கப்படும் , எதையும் , நான் , ஏற்றுக் கொள்வேன், என்று கீதையில் , கண்ணன் , சொல்லி இருக்கிறானே ! குசேலன் , கண்ணனுக்கு அவல் கொடுத்தான் ; குகன், ராமனுக்கு , மீனும் , தேனும் கொடுத்தான் ; கண்ணப்பன், சிவனுக்கு , இறைச்சி கொடுத்தான் ; பாட்டி , கொடுத்த பிட்டையும் , சாப்பிட்டான் , சிவன் ; உன் குழந்தைக்கு நீ சோறூட்டுகிறாய்
! சாப்பிட்டுக்கொண்டே , அது , தன் எச்சில் கையால் , ஒரு சிறு பருக்கையை , எடுத்து , திரும்பவும் , அதை , தன் வாயில் போட்டு , தடவி , உன் வாயில் , ஊட்டுகிறது !
9- கல்லா ? கடவுளா ?
அதுவாக நான்
அதை , நீ மறுத்து விடுகிறாயா ? அதை உண்டு , மகிழ்கிறாய் அல்லவா ? குழந்தைகளாகிய , நமக்கு அவன் தருகிறான் ; அதைத் திரும்பவும் அவனுக்குக் கொடுத்து , மகிழ்கிறோம்
! கல்லால் எறிந்து , பூசை , செய்தான் ஒருவன் ; கசையால் அடித்து , அவனை நினைத்தான் , ஒருவன் ! வில்லாலும் , அடித்து , வரம் பெற்றான், வேறொருவன் ; வேறொன்று நினைத்து , மலரால் , அடித்தவனைத் தண்டிக்கவில்லையா
, இறைவன்? எதைப் படைக்கிறோம் ? எதனால் அர்ச்சிக்கிறோம்
, என்பதல்ல , கேள்வி ! அதை எப்படிச் செய்கிறோம் ? என்பது தான் கேள்வி !
ஒரு இடத்தில் , அரிசிச்சோறு, உண்கின்றனர் ; வேறிடத்தில்
, கோதுமை , உண்கின்றனர ; பலர் பலவிதமான உணவு வகைகளை , உட்கொள்ளுகின்றனர் ; எல்லாம் வயிற்றுக்கே ! அதுபோல் , எல்லாம் இறைவனுக்கே , என்ற எண்ணம் வந்தால் , அங்கே , கேள்விக்கே , இடமில்லை ! எந்த ஐயமும் வேண்டாம் !
நீ எதை நினைக்கிறாயோ , அதுவாக , நான் ஆகிறேன் , என்று , கண்ணன், கீதையில் சொல்கிறான் ; அதைக் கேள் ! கடவுளை நினைத்து , எங்கே தேடினாலும் , அவன் இருப்பான் அல்லது வருவான் ! இன்னும் சொல்கிறேன் , கேள் ! என்று ,சொன்னார்
வேடன் ஒருவன் , காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான்
; வேட்டை முடிந்து , திரும்பும் வழியில் , முனிவர் ஒருவர் , கண்களை மூடி தியானத்தில் , ஆழ்ந்திருந்தார் ;.
அந்த வேடன் அவரிடம் கேட்டான் ! அந்த உரையாடலைக் கேள் !
"என்ன சாமி ! கண்ண மூடிக்கிட்டு , என்ன பண்றீங்க ?
" ஒருவரைத் தேடுகிறேன் அப்பா "
" என்னது ? கண்ண மூடிக்கிட்டு
, உட்காந்துகிட்டு , ஒருத்தர தேடுற , முத ஆளு , நீங்க தான் சாமி ! அது சரி ; " நீங்க ஒருத்தரு ! இன்னொருத்தரா ? நான் இங்க , வேற யாரையும் பாக்கலியே ? சாமி ! என்றான் ;
10- கல்லா ? கடவுளா ?
மனத்தைக் கட்டு
" அவர் மனிதன் இல்லையப்பா ! உன் மொழியில் சொல்வதென்றால்
, அதுவும் , ஒரு விலங்குதான் ! "
" அப்பிடியா ! அது என்ன விலங்கு சாமி ?, சிங்கமா ? புலியா ? கரடியா ? யானையா ? சட்டுனு சொல்லுங்க , சாமி ! அதெல்லாம் எனக்கு தூசு மாதிரி ! இப்பவே , புடிச்சி கொண்டு வறேன் ! உன்ன பாத்தா , பாவமா இருக்கு ! "
" உன்னால் , என்ன செய்ய முடியுமப்பா ? ...ம் ... சரி , சொல்கிறேன் ! அதற்கு சிங்கத்தின் தலை இருக்கும் ! மனித உடம்பு இருக்கும் ! ஆனால் பொல்லாதது ! உன்னால் பிடிக்க முடியாது ! "
" அப்பிடியா ? அந்த மாதிரி ஒரு வெலங்க , நான் இதுவரைக்கும் பாத்ததே , இல்லியே , சாமி ! சரி ! சொல்லிட்டீங்கள்ல
! நான் பாத்துக்கிறேன்
! நாளை சாயங்காலம் , அதப் புடிச்சிக்கிட்டு நான் வரல்லேன்னா , நான் இல்லேனு நினைச்சுக்கங்க , அப்பறம் என்ன எதிர்பாக்காதீங்க " என்று , சொல்லி விட்டு போனான் ; மறுநாள், அஸ்தமன நேரத்தில் , அந்த விலங்கைக் கட்டி இழுத்துக் கொண்டு , வந்தான் ; அவன் சொன்னான்; " நீங்க சொன்ன மாதிரி , இது ஒன்னும், பொல்லாதது இல்ல சாமி ! ரொம்ப சாது ! நீங்க சொன்ன உடனே , இத புடிச்சு , உங்ககிட்டு கொண்டு வந்து , விடாம , ராத்திரி , தூங்கவும் கூடாது ; வீட்டுக்கு , போகவும் கூடாது ; தண்ணி , சாப்பாடு , எதுவும் கூடாதுன்னு , முடிவு பண்ணிகிட்டேன்
, சாமி ! ராத்திரி முழுக்க தேடுனேன் ; பகல் முழுக்க , தேடுனேன் ; பொழுதும் போச்சி ; ஆனா அந்த விலங்கு கண்ணுல படவே இல்ல ; இனிமே இருக்கிறதுல
, பிரயோஜனம் இல்லனு , முடிவு பண்ணி , உங்க கிட்ட , நான் , சொன்ன மாதிரி சாகிறது , தான் நம்ம வழின்னு , ஒரு கிணத்தப் பாத்து , போறேன் சாமி ! போனா , எனக்கு எதுத்தாப்பில , கட்டிப் போட்ட , எரும மாடு மாதிரி , நிக்கிது !
11- கல்லா ? கடவுளா ?
என்னையும் கட்டுவாய்
அட இதப் பார்றா ! இங்க நிக்கிற , இத விட்டுட்டு , எங்கெங்கயோ , தேடுனமேன்னு , நினைச்சிக்கிட்டே , மெதுவா , ஓடிறக் கூடாதில்ல , பக்கத்துல போனா , இது கொஞ்சம் கூட அசையவே இல்ல , சாமி ! மண்ணு மாதிரி நிக்குது ! சரி ! கயித்தில , எதுக்கும் , கட்டிகுக்குவோம்னு , கட்டுனேன் ! அப்பிடியே நின்னுச்சு , கட்டி முடிக்கிற வரைக்கும் ! அப்ப , இத நம்ம தான் , இழுத்துட்டுப் போகணும் போலன்னு , நெனச்சா , பழகின மாடு மாதிரி , பின்னாலயே வருது ! இதப் பாருங்க சாமி ! இதான , நீங்க தேடுன , அந்த விலங்கு ! இருந்தாலும்
, இவ்வளவு சாதுவா ஒரு விலங்க , நான் பாத்ததே இல்ல சாமி " என்று சொல்லியபடியே , வந்தான் , அந்த வேடன் ! அதைப் பார்த்த , முனிவர் திகைத்து எழுந்தார் ! எந்த விலங்கைத் தேடி , இத்தனை ஆண்டுகள் , நிஷ்டையில் இருந்தாரோ , அது தான் , அவன் கொண்டு வந்த விலங்கு ! தசாவதாரத்தில்
, மஹாவிஷ்ணு , எடுத்த , நரசிம்ம விலங்கு ....
கேள் மன்னா ! முனிவர் , எழுந்ததும் அங்கே , அந்த நரசிம்ம விலங்கு மறைந்தது ; சங்கு சக்கரங்களோடு மஹாவிஷ்ணுவே நின்றார் ! முனிவர் , அவர் காலடியில் வீழ்ந்தார் ; இதைப் பார்த்த வேடனுக்கு , ஒன்றும் , புரியவில்லை ! முனிவர் , " ஐயனே ! நான் காண்பது மெய்யா ? எந்த கோலத்தைக் காணவேண்டுமென்று , இத்தனை ஆண்டுகள் , தவம் கிடந்தேனோ , அது இவனாலா , எனக்கு கிடைத்தது ? சுவாமி ! என் பக்தியில் , என்ன குறை கண்டீர்கள் ? என்னால் நம்ப முடியவில்லை
, ஸ்வாமி ! " " முனிவரே ! நம்மைவிட மற்றவர்கள் , தாழ்வானவர்கள் , என்ற எண்ணத்தை விட்டொழியும் ! வருந்தாதீர் ! அவனைக் குறைவாகவும் எண்ண வேண்டாம் ! உமது பக்தி குறைந்தது
, என்று நான் சொல்லவில்லை
; எனக்குத் தேவை , சம்பிரதாயங்கள் அல்ல ! சரணடைதல் !
12- கல்லா ? கடவுளா ?
என்னைத்
தேடி இருவர்
சம்பிரதாயம் , தொலைவை , அதிகரிக்கும் ; சரணடைதல் , நெருக்கத்தை
, இறுக்கமாக்கும் !
ஆனால் , இவனை வைத்துப் பார்க்கும்போது , உமது பக்தி குறைந்தது தான் ; நீர் தவம் செய்தீரே தவிர , அதில் , தீவிரம் காட்டவில்லை ! குறிக்கோள் இருந்தது , ஆனால் அதில் வெறி இல்லை ; இருப்போம் , அது கிடைக்கும் போது , கிடைக்கட்டும்
, என்ற , அலட்சிய பாவமே , அதில் மேலோங்கியிருந்தது ; என் கோலத்தைக் காண , விரும்பிய நீர் , ஒரு முறையேனும் அதை உங்கள் மனக்கண்ணில் , காண விரும்பியதுண்டா ? ஆனால் இவன் தன் , எண்ணமெல்லாம் , அந்த கோலத்தை நிறைத்துக் கொண்டான் ! இவ்வளவு , காலத்துக்குள் , நான் விரும்பியதை , அடைவேன் என்று , ஓர் இலக்கு , வைத்துக் கொண்டான் ; உம்மிடம் இருந்ததா ? முடிந்தால் , நாளை மாலைக்குள் பிடிப்பேன் , இல்லையெனில் என் உயிரை முடிப்பேன் என்ற இலக்கு , இவனிடம் , இருந்தது ! இவன் உம்மைப் போல் கற்றவன் இல்லை ! விரும்பியதை அடையாமல் , வீடு திரும்புவதில்லை
, என்ற வெறி , இருந்தது ! அது வரை , அன்ன ஆகாரம் , எதுவும் வேண்டாம் , என்ற , உறுதி இருந்தது ! இல்லையெனில் , இறப்பேன் , என்ற தீவிரம் இருந்தது ; அவன் நினைவில் , நீர் சொன்ன அந்த விலங்கே நிறைந்திருந்தது ! நீரும் படித்தீரே ! நீ எதுவாக நினைக்கிறாயோ
, அதுவாக நான் இருக்கிறேன் , என்று நான் சொன்னதை ! எங்கே நினைத்தீர் ? அதுவாக நான் வர ? சொல்லும் ! இன்று இவனுக்கு , நாம் அகப்படவில்லையெனில் , நிச்சயமாக , அவன் , மடிவான் என்று அஞ்சினேன் ; ஒரு பக்தன் துன்புறுவதைக் காண நான் சகியேன் , என்றும் படித்திருப்பீரே
! அவனைக் காப்பாற்றவே
, சாதுவாக அவனிடம் நின்றேன் ! அவன் சொல்லாமலேயே
, அவனுக்குக் கீழ்ப் படிந்தேன் ; அவன் கட்டாமலேயே அவனிடம் நான் கட்டுண்டேன்
;
13- கல்லா ? கடவுளா ?
மனதில் உறுதி வேண்டும்
ஆவேஷமானது , ஆக்ரோஷமானது
, பொல்லாதது , என்றெல்லாம்
, என்னைப்பற்றி நீர் சொன்னீரே ? அது , உண்மைதான் ! ஆனால் , அவன் என்ன சொன்னான் என்று , கேட்டீரா ? என்னை எந்த துன்பத்துக்கும் ஆளாக்காமல் , முரண்டு பிடிக்காமல்
, இது என்னோடு வந்தது என்று ! அதை எண்ணி நான் மகிழ்கிறேன்
! பெருமைப் படுகிறேன் ! முனிவரே ! ஆம் ! அவனுடைய உறுதிக்கு , நான் அடிமை ! அவனுடைய பக்திக்கு , முன்னால் நான் ஒரு சிறு கன்று ! சிங்கமாக இருந்த நான் , சின்னஞ்சிறு கன்றாக நின்றேன் ! ஆவேஷமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்த நான் , அத்தனையையும் விட்டு விட்டு , அவனுக்குப் பின்னால் அமைதியாக , வந்தேன் ! இதுதான் , அவன் என்னைக் கட்டிப்போட்ட கதை ! நல்லது ! என்னைத் தேடி இருவர் வந்தீர்கள் ! எந்த உருவிலும் என்னைத் தேடுபவர்களை , நான் கைவிடுவதில்லை ! உங்கள் வழி எதுவாயினும் , அது பற்றி நான் கவலைப் படுவதும் இல்லை ; அது நல்ல வழியாக மட்டுமே , இருக்க வேண்டும் என்பதே , என் நிலை ! எழுந்திரும் முனிவரே ! வருந்தாதீர் ! நீவிர் , இருவரும் , என் அன்பர்களே ! வாருங்கள் ! அன்பான, வேடனே ! நீயும் , என்னோடு வா ! நீங்கள் இருவரும் என்னோடு வருகிறீர்கள்
! " என்று அவர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான் , இறைவன் ; கேட்டாயா ? மன்னா ! என்று முடித்தார் , சுவாமி ! எல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ! ஆனால் ..என்று
தயங்கிய மன்னரிடம் , எது நன்றாக இல்லை என்று கேட்டார் சுவாமிகள் ; சுவாமி ,
…கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்களே ! அதற்கு என்ன பதில் சுவாமி ? உன்னிடம்
அடிப்படை இருக்கிறது என்று நம்பி சில விஷயங்களைச் சொன்னேன் , என்றவரிடம் ; மன்னியுங்கள் சுவாமி ! அவர்களுக்கு பதில்
சொல்வதற்காகக் கேட்டேன் ; என்றார் மன்னர் !
14- கல்லா ? கடவுளா ?
கடவுள் இருக்கிறாரா ?
வாய்விட்டுச் சிரித்த
சுவாமிகள் ; உன்னிடம் அடிப்படையே இல்லை என்று இப்போது தான் தெரிகிறது என்றார் ;
மன்னியுங்கள் சுவாமி !
சிலர் அப்படிப் பேசுகிறார்கள் ; கடவுள் இருக்கிறது என்பது மூட நம்பிக்கை
என்கிறார்கள் ; அவர்களுக்கு நமது பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்குத் தான் அப்படிக் கேட்டேன் , என்றார் மன்னர் ; பரவாயில்லை ; உன் கேள்வி
தவறு தான் ; என்றாலும் கேட்டதற்கான காரணம் சரி ; ஆகையால் கேட்டதில் தவறில்லை ;
புரிந்து கொண்டால் சரி என்றவர் , விஞ்ஞானம் என்றால் என்ன சொல் என்று கேட்டார்
சுவாமி ; அறிவியல் ; ஆங்கிலத்தில் science ; என்றார் மன்னர் ; கடகடவெனச் சிரித்த சுவாமிகள் , what is science என்று கேட்டார் ; மன்னர் ஒன்றும் சொல்லவில்லை ;
சுவாமிகள் சொன்னார் : சாரட்டில்
செல்கிறாயே ! அது தானாகவே , நீ போகுமிடத்துக்கு செல்லுமா ? போகாது சுவாமி ; அதை
சாரதி ஓட்ட வேண்டும் ;
சுவாமி சொன்னார் ; ஓட்டுனர்
இல்லாமல் வண்டி ஓடாதென்பாய் ! ஆனால் ஒருவன் இல்லாமல் இந்த உலகம் இயங்காதென்றால் ஒப்புக்கொள்ள
மாட்டாய் ! அப்படித் தானே ? நாம்
வாழ்கின்ற இந்த பூமியில் , இரவு என்றும் பகல் என்றும் மாறி மாறி வருகின்றன ; கோடை
, குளிர் , மழை , வறட்சி என்று பருவ காலங்கள் மாறுகின்றன ; பூமி , சந்திரன் ,
சூரியன் , கிரகங்கள் , நட்சத்திரங்கள் என்று எல்லாமே ஒரு சீரான தூர மற்றும் கால
இடைவெளியில் , ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் . இந்தப் பேரண்டத்தில் சுற்றிச்
சுற்றி வருகின்றன ; இவை எல்லாமே தானாகவே நடக்கும் செயல்கள் என்று கூறுகிறாயா ?
கோழியிலிருந்து முட்டை , முட்டையிலிருந்து கோழி என்று மாறி மாறி முன்னோக்கிச்
சென்றால் , முதலில் இருந்தது எது என்று தெரியவேண்டுமல்லவா ? எதுவும் இல்லாமல்
ஏதாவது நடக்குமா ?
15- கல்லா ? கடவுளா ?
விஞ்ஞானமும் ,
மெய்ஞானமும்
நடைபெறுகின்ற
காரியங்கள் எல்லாம் ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன ; அந்த காரணம் எது என்பதைக்
கண்டறிவது தான் விஞ்ஞானம் ; காரணம் எது என்பதைக் கண்டறிந்து விட்டால்
தீர்வுகளையும் கண்டறிய முடியும் என்பது தான் விஞ்ஞானம் , மெய்ஞானம் ஆகிய இரண்டு
கோட்பாடுகளின் முடிவு ; வெயில் அடிக்க சூரியன் வேண்டும் ; மழை பெய்ய மேகங்கள்
வேண்டும் : உலகம் இயங்க ஒரு காரணம் வேண்டும் ; அந்த காரணம் கடவுள் என்று சொல்வது
மெய்ஞானம் ; ஆகையால் விஞ்ஞானமும் , மெய்ஞானமும் ஒன்று தான் ; கடவுள் இருக்கிறார்
என்று நம்பித்தான் ஆக வேண்டும் ; “ புரிந்து கொண்டேன் : எல்லாம் சரி தான் , சுவாமி ஆனால் " ,
" தயங்காமல் கேள் ; சொல்கிறேன் ! " என்றார் , சுவாமி ! " இந்த
சிலை வழிபாடு தான்
,
எனக்குப் பிடிக்கவில்லை
! சுவாமி " , என்றார் மன்னர் !
" இன்னுமா ? உனக்கு , தெளிவு பிறக்கவில்லை ?
என்ன சொல்கிறாய் ?
மன்னா ! சிலை
வழிபாடா ? சொரூப வழிபாடா ? அல்லது ரூப வழிபாடா ?
" என்று
கேட்டார் சுவாமி ; " தங்கள் கேள்வி , எனக்குப் புரியவில்லை சுவாமி " என்றார் , மன்னர் ;
" சொல்கிறேன் ; கேள் ! சுய ரூபம் என்பது தான் , சொரூபம் ; ஒரு உண்மையான அதாவது நிஜமான ஒன்றைப் பார்த்து , அதே போல , ஒன்று செய்தால் , அது சொரூபம் ; நாம் இறைவனின் உண்மையான உருவத்தைப் பார்த்ததில்லை
, ஆதலால் , நாம் அவனது சொரூபத்தைச் செய்யவும் முடியாது ! வணங்கவும் , முடியாது ! ரூபம் என்பது நமக்குத் தேவையான , அல்லது பிடித்தமான ஒன்றை , ஏதோ ஒரு உருவத்தில் செய்து கொள்வது , நாம் இப்போது வழிபடுவது , உருவ வழிபாடு , அதைச் சிலை வழிபாடு , என்று சொல்லி விட முடியாது ! ஏன் என்று கேள் !
16- கல்லா ? கடவுளா ?
வர வேண்டிய இடம்
இந்த உருவத்தை , சிலர் காகிதத்தில் , வரைந்து கொள்கிறார்கள்
; சிலர் மரத்தில் செதுக்கிக் கொள்கிறார்கள்
; சிலர் மண்ணில் , வனைந்து கொள்கிறார்கள்
; சிலர் கல்லில் , உலோகத்தில் , வடித்துக் கொள்கிறார்கள் ;
இப்படி , எல்லோரும் தான், உருவ
வழிபாடு செய்கிறார்கள்
! இந்த முறையில் , நாம் உலோகம் மற்றும் கற்கள் என்று மட்டும் இல்லாமல் , எல்லாவற்றிலும்
, உருவங்கள் செய்து , பூஜிக்கிறோம் ! இதில்
என்ன ? தவறு கண்டாய் ? " அவருடைய பதில் , அவருக்கே , திருப்தி தரவில்லை , என்று அவருக்கும் , தெரியும் ! இருந்தாலும் ," என்ன
மன்னா ! " என்றார் , சுவாமி ! " இல்லை
சுவாமி ! இது எனக்கு , நிறைவைத் தரும் , பதிலாகத் தெரியவில்லை ! அவர்கள் செய்கிறார்கள் , அதனால் , நாமும் செய்கிறோம் ; அதனால் , அதில் தவறு இல்லை , என்று சொல்வது , நல்ல விளக்கமாகத் தெரியவில்லை என்னை மன்னிக்க வேண்டும்
, சுவாமி " என்றார் மன்னர் .
சுவாமி , புன்னகைத்தார்
! நீ எந்த இடத்துக்கு , வரவேண்டும் , என்று , நான் , விரும்பினேனோ , அந்த இடத்துக்கு , இப்போது தான் வந்திருக்கிறாய் ! பேசியபடியே , சுற்றிலும் நோக்கினார் ; சுவர்களில் , கண்ணாடியும்
, சட்டமும் அமைக்கப் பட்ட பல படங்கள் மாட்டப்பட்டிருந்தன ; ஒரு சில படங்களுக்கு , மாலைகளும் சூட்டப் பட்டிருந்தன ! அவற்றில் , மன்னர் முன்பு காட்டிய , அவரின் பாட்டனாரின் , படத்தின் மேல் , சுவாமியின் பார்வை நிலைத்தது ; மன்னரிடம் , அந்த படம் வேண்டும் , என்று கேட்டார் ; மன்னர் பணியாளரைப் பணித்தார் ; பணியாளர் படத்தைக் கொண்டுவந்தார் ; படத்தைக் கையில் வாங்கிய சுவாமி , சிறிது நேரம் , அதை உற்றுப் பார்த்து விட்டு , முகத்தில் எவ்வித மாறுதலும் இன்றி , யாரும் எதிர்பாராத வகையில் , படத்தின் மேல் தூவென்று துப்பி , கீழே போட்டுக் காலால் எட்டி உதைத்துத் தள்ளினார் !
17- கல்லா ? கடவுளா ?
கல்லா அவன்
சுற்றிலும் இருந்தோர் கைகளைப் பிசைந்தனர் ! மன்னரின் முகம் சிவந்தது ! மீசை துடித்தது ! தன்னையும் அறியாமல் , கைகள் , உடை வாளருகே சென்றன ! எனினும் , செய்தது சுவாமி , என்று தன்னை , அடக்கிக் கொண்டார்
! என்றாலும் , கேட்காமல்
, இருக்க முடியவில்லை ;
" என்ன காரியம் செய்துவிட்டீர்கள் ? சுவாமி !
" , படபடத்தார் , மன்னர் ;
" ஏன் மன்னா ! ஆத்திரப் படுகிறாய் ? ஒரு படத்திற்கு
, இவ்வளவு பதட்டமா ? ஏன் ?" சுவாமி கேட்டார் ! "சுவாமி ! அது சாதாரணமான , படம் இல்லை ; என் பாட்டனாரின் படம் ! என் தந்தையாருக்குத் தந்தையார் ! அவர் வழிபட்டு வந்த , அப்படத்தை இப்பொழுது , நான் வழிபடுகின்றேன் ! எனக்குப் பிறகு , என் பிள்ளைகளும் , வழிபடுவர் ! சுவாமி என்னால் , இதைத் தாங்க முடியவில்லை ! நீங்களா இப்படிச் செய்தீர்கள் , என்று என்னால் நம்பவும் முடியவில்லை !
" பொங்கினார் , மன்னர் ! அமைதியாய்ச் சிரித்த , சுவாமி பேசினார் ; "
என்னை , மன்னித்து விடு மன்னா ! உன்னைப் பெற்ற , உன் தந்தையைப் பெற்ற , உன் பாட்டனாரின், வெறும் படம் தான் அது ! அதில் ஒன்றும் உயிர் இல்லை ! காகிதத்தாலும் மரத்தாலும் , கண்ணாடியாலும் ஆக்கப் பட்டது தான் , அது ! என்றாலும் நீ , அதைக் காகிதம் என்றோ , கண்ணாடி என்றோ , நினைப்பதில்லை
; நீ பார்க்காத அவரை , ஆனால் உன் தந்தையார் சொன்னார் என்று நம்பி , அது , உன் பாட்டனார் என்றே , எண்ணி வழிபடுகிறாய் ; மரியாதை செய்கிறாய் ! நீயே உருவாக்கிக் கொண்ட , இந்த உருவப்படத்தில்
, உன் பாட்டனார் , இருப்பார் ; ஆனால் , அவன் உருவாக்கி வைத்த , இந்த கல்லில் , அவன் இருக்க மாட்டானா ? என்றோ , மறைந்து போன , உன் பாட்டனாரின் , உருவத்துக்குத்
தருகின்ற , மரியாதையை , இன்றும் இருக்கின்ற , இறைவனின் உருவத்துக்கு ,
தரப் பிடிக்கவில்லை
, என்கிறாய் ! சிந்தி , மன்னா ! "
18 கல்லா ? கடவுளா ?
அகந்தையை
அகற்று
இந்த உலகைப் படைத்தவன் இறைவன் ! அதில் உள்ள , உயிர்களைப் படைத்தவனும் அவனே ! அவன் எல்லாவற்றிலும் , இருக்கிறான் ! எங்கும் இருக்கிறான் ! எல்லாவற்றையும் , படைத்த அவனால் , மனிதரையும் , விலங்குகளையும் , படைத்த அவனால் , அதில் ஒன்றாக , ஏதோ ஒரு உருவத்துக்கு ,
மாற முடியாதா
? ஒரு நாடகத்தை , எழுதி , இயக்குகின்ற ஒருவனால் , அந்த நாடகத்தில் , ஒரு பாத்திரமாக நடிக்க முடியாதா ? எங்கும் இருக்கின்ற , அவனால் , இந்தக் கல்லில் , சிலையில் , இருக்க
முடியாதா?ஆனால் , நம்மாலோ எங்கும் , இருக்கின்ற அவனை , அங்கெல்லாம் , நம் சிந்தையைச் செலுத்தி , வணங்க முடியாது ! நாம் பார்ப்பது எது , என்று , பார்வை தீர்மானிப்பதில்லை
! அது உனக்குள்ளே இருக்கின்ற உணர்வுதான் ! இது கல் , என்று எண்ணிப் பார்த்தால் , அது கல் தான் ! கடவுள் என்று எண்ணினால் , அது கடவுள் ; ஏன் ? அவ்வாறு எண்ண வேண்டும் , என்பாய் ! எல்லாத் திசைகளிலும் , இருக்கின்ற அவனை , எந்தத் திசையை நோக்கித் தொழுவது ? எல்லாப் பொருட்களிலும்
, இருக்கின்ற இறைவனை , எந்தப் பொருளைப்
பார்த்து , வணங்குவது ?
வணங்குவதற்கு ஒருமுகமான மனம் வேண்டும் ! மனம் , ஒன்றிலே
, லயித்தால் தான் , ஒருமுகமாகும் ! எங்கும் நிறைந்திருக்கின்ற , காற்றைப் பம்ப்பின் வழியாக ,
டியூப்புக்குள் செலுத்துவதைப்போல
, பசுவின் உடலில் ஊறுகிற பாலை , மடியின் வழியாகக் கறப்பதைப் போல , இறைவன் அருளைப் பெற , மனதை , ஒருமுகப்படுத்த வேண்டும் ! அவ்வாறு ஒருமுகப்படுத்த
, ஒரு குறிப்பிட்ட பொருளில் , பார்வையைச்
செலுத்த வேண்டும் ! அந்த ஒரு பொருளாக , நமக்குத் தெரிந்த வடிவத்தில் , ஒரு சிலையை ,
அமைத்திருக்கிறோம் ! இது ஒரு வழிதான் ! இதுவே முடிவல்ல ! முடிவு அவனை அடைவதே ! சிலை வழிபாடு , அல்லது , உருவ வழிபாடு , பொருளற்றது என்று , கூறுவதும் கடவுளே
இல்லை என்று சொல்வதும் , அனைத்தும் , நான் அறிந்தவன் , என்று , தன்னைப் பற்றிப் பெருமையாக , உயர்வாக , எண்ணிக் கொள்வதன் , வெளிப்பாடே ஆகும் ! தராசில் , தாழும் தட்டில் தான் , கனம் அதிகம் ! உயரும் தட்டில் , கனம் குறைவு , என்பதை , நீயும் அறிவாய் ! அறிவுக்கும் , அதே விதிதான் ! கடவுள் , விவாதத்துக்கு அப்பாற்பட்டவர்
! வெறும் , விவாதங்களின் மூலம் , கடவுளை அடைய முடியாது ! பக்தி ஒன்றே நம்மைக் கடவுளிடம் , கொண்டு
சேர்க்கும் ! " என்று
விளக்கிய , சுவாமி " இதை உனக்குக் காட்டவே , இவ்வாறு நடந்து கொண்டேன் ; என்னை மன்னித்து விடு " என்றார் , மறுபடியும் அடக்கத்துடன் !
தடாலென்று , காலடியில் வீழ்ந்தார் , மன்னர் ! " மன்னியுங்கள் என்று , மறுபடியும் , மறுபடியும் சொல்லாதீர்கள் , சுவாமி ! அறியாமையில் கிடந்த , என்னை , நீங்கள் தான் , மன்னிக்க வேண்டும் ! " என்று
, தேம்பியழுத , மன்னரின் முகத்தில் , தெளிவு தெரிந்தது ! நான் எனும் , அகந்தை எனும் , அறியாமை இருள் அகல , ஆண்டவன் , அருள் புரியட்டும் ! நிறைவு பெறுகிறது
! வணக்கம்



No comments:
Post a Comment