என் மடியில் நீ கிடந்து மினுங்குகிறாய்!-அட
உன்மீது நான் சாய்ந்தால் சிணுங்குகிறாய்!
நேரத்தில் பெரும்பகுதி விழுங்குகிறாய்!-நான் இல்லாத நேரத்தில் உறங்குகிறாய்!
வருடங்கள் பலசென்று படும் கஷ்டத்தில்-வரும்
நெருடலினால் நினைவெல்லாம் பதிந்திராது!
பலநூறு ஆனாலும் உந்தன்டிஸ்க்கில்-நான்
பதித்ததுவோஎந்நாளும் அழிந்திராது!
கள்ளத்தால் உனக்குள்நான்புகமுடியாது!-மறந்து-கவனமின்றிபோட்டதையும்தொடமுடியாது!
ஒருநாள்நீ ஒருபொழுதுஏதோஆனாய்!-என்று
சரிபார்த்தஅவனாலேமோசம்போனாய்!
சாகசத்தால்உன்னைஅவன்என்னசெய்தான்?-அழிச்
சாட்டியங்கள்பண்ணுகிறாய்!என்ன செய்தேன்?
துணையாக வந்தவளோஅன்புத்தாரம்!-எனக்கு
வினையாக வந்தவள்நீஇரண்டாம்தாரம்!
உண்மையிலே நீ எனக்கு முதலாம் தாரம்!-எனில்,
ஒருவகையில்அவளெனக்கு,இரண்டாம்தாரம்!
உன்னைத்தான் நான்முதலில்கைஎடுத்தேன்!-அதன் பின்னேதான் என்னவளைக் கைபிடித்தேன்!
கள்ளையும் என்றும் உண்டால்தான்மயக்கம்!
பெண்ணையோ கண்ணால் கண்டால்தான்மயக்கம்!
உன்னையோ கையால் தொட்டாலும்மயக்கம்!
ஒருவேளை தொடாமல் விட்டாலும்மயக்கம்!
பார்வையோ எப்போதும் உன்பக்கம்இருக்கும்!
பார்ப்ப தெல்லாம் எனக்குஅப்போது வெறுக்கும்!
மூடிக் கிடக்கும்உன்
முகம் மாற்ற உன்னை நான் தொடுகணிணி!
ஏற்றம் பெறத்துடிக்கும்
எனைமாற்ற என்னைநீ தொடாக்கணிணி!
கிணற்றுத் தவளைஎனக்,
கண்மூடிக் கிடப்பதனால், மடக் கணிணி!
உணர்வுகளே இல்லையென,
உறக்கத்தில் இருப்பதனால், ஜடக் கணிணி !
வேறெதுவும் செய்யாமல்,
சோம்பலினை வளர்ப்பதனால், மடிக் கணிணி !
உற்றாரைப் பார்க்காமல்,
உறவுகளை அழிப்பதனால், மடி கணிணி !
எடுத்துன்னை வைக்காமல்,
மடித்தபடி வைப்பதனால், மடி கணிணி !
எப்போதும் நீஎனது,
மடிமீது தவழ்வதனால், மடிக் கணிணி !
எந்தன் துயர் தீர்த்து,
எண்ணியதைத் தான்கொடுக்கும்,காம தேனு நீ !
விந்தைகள் பலசெய்து,
சிந்தையினைக் கவர்ந்திழுக்கும்,அரும் ஜனனி!
No comments:
Post a Comment